முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் நேற்று நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில் 36 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணி வழங்கினார் திருவண்ணாமலை வட்டம் நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அம்மா திட்டம் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

இந்த முகாமுக்கு தி.மலை வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பார்த்த சாரதி முன்னிலை வகிக்க, வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார் இந்த முகாமில் மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 36 மனுக்கள் ஏற்கப்பட்டது. 42 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் பரிசீலனை செய்யப்பட்ட 36 மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் வருவாய்த்துறை அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் சி.முருகன், என்.நாகமுத்து, கே.மணி, சி.அன்பு, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் இ.கஜேந்திரன் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்