எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்கள் கூட்டத்தில் வெளியிட்டார். ‘ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கை இருக்கிறது. நான் ஒரு கருவி. நடிகனாகத்தான் ஆண்டவன் இந்த நிமிடம் வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று அவர் கூறினார்.
ரசிகர்களுடன் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சென்னையில் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இம்மாதம் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை ரஜினி சந்தித்தார். முதல்நாளில் மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 750 பேர் ரஜினியை சந்தித்து தனித் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய விசேஷ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே ரஜினியோடு புகைப்படம் எடுக்க மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள். அடையாள அட்டை இல்லாதவர்கள் சென்னைக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாலையிலேயே மண்டபத்துக்கு அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் அனைவரும் மண்டபத்தின் உள்ளே இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.சரியாக 9 மணிக்கு ரஜினி மேடைக்கு வந்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவருடன் டைரக்டர் எஸ்.பி. முத்துராமனும் வந்திருந்தார். முதலில் எஸ்.பி. முத்துராமன் பேசினார். ரஜினியை வைத்து 25 படங்களை நான் இயக்கி இருக்கிறேன். புகழை தலையில் வைத்துக் கொள்ளாதவர் ரஜினி. கேமராவுக்கு பின்னால் ரஜினி என்றுமே நடித்ததில்லை’ என முத்துராமன் கூறினார். எஸ்.பி.முத்துராமன் பேசியதற்கு பின்பு ரஜினிகாந்த் பேசினார்.
அவர் பேசியதாவது:-
தண்ணீருக்குள் காலை வைக்கிறோம். காலை வைத்தவுடன் தான் தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் எல்லாம் இருக்கிறது என்று. காலை பின்னால் எடுக்கவில்லை என்றால் பிரச்சினையாகி விடும். முரட்டு தைரியம் எல்லாம் இருக்கக் கூடாது. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். நான் ஒவ்வொரு தேர்தல் வரும் போதும், என்னுடைய ஆதரவு யாருக்குமில்லை என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறேன். அனைவருமே என்னுடைய ஆதரவுக்காக காத்திருப்பதில்லை.
பணம் சம்பாதிக்க நினைப்பது தவறு
என்னுடைய பெயரை வைத்து யாரும் ஆதாயம் தேடிவிடக் கூடாது என்பதற்காகத் தான் சொல்கிறேன். பல ரசிகர்கள் எனக்கு நிறைய கடிதங்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள். நாமும் படம் பார்த்துக் கொண்டு இப்படியே இருந்தால் எப்படி?, நாம் எப்போது முன்னேறுவது, நமக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் இன்னோவா வண்டியில் போகிறார்கள். கவுன்சிலர் ஆகிறார்கள், எம்.எல்.ஏ ஆகிறார்கள், மந்திரி ஆகிறார்கள். நாம் எப்போது அப்படி ஆவது, பணம் சம்பாதிப்பது என்று சில ரசிகர்கள் கேட்கிறார்கள், பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். அது தப்பில்லை. கவுன்சிலர் ஆகலாம், மந்திரி ஆகலாம் என்ற ஆசையிருப்பதில் தவறில்லை. ஆனால், அதை வைத்து பணம் சம்பாதிப்பது என்று நினைப்பது தவறு. அவர்கள் சொல்வதைக் காணும் போது வருத்தப்படுவதா, கோபப்படுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.
ஆண்டவன் கையில் நான் ஒரு கருவி
நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. இந்த உடம்பை நான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இதயத்தை தூயமையாக வைத்திருக்க வேண்டும். அந்த ஆண்டவனிடம் நான் ஒரு கருவி. அவர் என்னை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது நடிகனாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்திகிறனோ அப்படி இருப்பேன். அவன் என்னவாக பயன்படுத்தினாலும் அதில் நியாயமா, உண்மையா, தர்மமா, மனசாட்சியோடு பணிபுரிவேன்.
இப்போது நடிகனாக எனது கடமையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அதே மாதிரி என்ன பொறுப்புக் கொடுத்தால் கூட நியாயமா, உண்மையா, சத்தியமாகச் செய்வேன். அது என்ன என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்குத் தான் தெரியும். நீங்கள் ஒரு கெட்ட காரியம் செய்யும் போது, மனசாட்சி செய்ய வேண்டாம் என்று சொல்லும். அதை மீறி தான் நாம் செய்கிறோம். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
விசா கொள்கையில் திடீர் மாற்றம்: ஆஸி., நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
08 May 2024மெல்போர்ன், மாணவர்களுக்கான விசா கொள்கையில் ஆஸ்திரேலிய அரசு மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.