முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வால்பாறையில் வருவாய் தீர்வாயம் பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழக்கிழமை, 18 மே 2017      ஈரோடு
Image Unavailable

வால்பாறையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை அன்று வருவாய் தீர்வாயம் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் வீ.மோகன் தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் மயில்கணேசன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

51 மனுக்கள் பெறப்பட்டது

சிறப்பு விருந்தினராக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து 51 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, நலிந்தோருக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கான உத்தரவு மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளும், அ.தி.மு.க.நிர்வாகிகள், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் அ.சௌவுதீன், நகர கழக துணைச் செயலாளர் பொன்கணேசன், நகர அம்மா பேரவை செயலாளர் கேபிள் நரசப்பன், பேரவைத் தலைவர் பாபுஜி, பாசறை தலைவர் காய்கறிகடை சசி, மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தீர்வாயத்தில் கலந்துகொண்ட மனுதாரர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்