எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
கலெக்டர் , சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000-ம் பெறுவதற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.20000- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், வருவாய்த்துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.2,87,520- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.89,400- மதிப்பிலான இடுபொருட்களையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக 25 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.56,416- மதிப்பிலான இடுபொருட்களையும் என ஆகமொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் கூறியதாவது, தமிழக அரசு இந்த வறட்சியான காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக 76,320 விவசாயிகளுக்கு ரூ.55 கோடி வறட்சி நிவாரணமாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளுக்காக நமது மாவட்டத்தில் 9 உலர் தீவன கிடங்குகள் மூலம் சலுகை விலையில் ரூ.2- க்கு வைக்கோல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 6 உலர் தீவன கிடங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளே மாட்டு தீவனங்களை தயாரிக்க பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 220 மெட்ரிக் டன் தீவனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதம்பரம் பகுதியில் கடல்நீர் உள்ளே புகுந்து குடிநீர் உப்பாவதை தடுப்பதற்காக தடுப்பணை அமைத்தல் போன்ற நீண்டகால திட்டங்களுக்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 130 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் கடலூர் மாவட்டத்தில் ரூ.140.01 கோடி மதிப்பீட்டில் 5 வெள்ளத்தடுப்பு பணிகளை துவக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள 545 ஏரிகள் மற்றும் குளங்களில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் வீடு கட்டுவோர்கள் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. பேச்சு
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் இந்த மனுநீதிநாள் முகாமில் தெரிவித்ததாவது,கலெக்டர் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களை தேர்தெடுத்து இந்த மனுநீதிநாள் முகாமை நடத்துவதை நினைத்து பெருமகிழ்ச்சியடைகிறேன். கலெக்டர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கிராம மக்கள், விவசாயிகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பின் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள இடங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். கலெக்டர் உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். சிதம்பரம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணையும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையும் கட்ட கோரிக்கை வைத்துள்ளேன். கலெக்டர் அரசின் பரிசீலினைக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
கலெக்டருக்கு நன்றி
நஞ்சை மகத்துவாழ்க்கை கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா மாதந்தோறும் வழங்கும் முதியோர் உதவித்தொகையை ரூ.1000- மாக உயர்த்தி வழங்கினார்கள். இதனால் லட்சக்கணக்கான முதியோர்கள் பயனடைந்து வருகிறார்கள். கலெக்டர் மிகவும் உத்வேகத்துடன் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகான முனைப்புடன் செயல்பட்டு வருவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்இந்த மனுநீதிநாள் முகாமினை முன்னிட்டு ஏற்கனவே 148 மனுக்கள் பெறப்பட்டு அதில் 43 தகுதியான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 96 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இன்று 79 மனுக்கள் வரப்பெற்றது. அவைகளின்மீது விதிகளின்படி பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்து.இந்த மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் மகேஷ் இந்த மனுநீதிநாள் முகாம் சிறப்புற நடைபெறுவதற்கான பணிகளை மேற்கொண்டார்.
பலர் பங்கேற்பு
இந்த மனுநீதிநாள் முகாமில் இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) கனகசபை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கிருபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கு.மதிவாணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, துணை மேலாளர் (தாட்கோ), சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குநர், அரசுத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வீகம், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


