எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
கலெக்டர் , சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000-ம் பெறுவதற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.20000- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், வருவாய்த்துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.2,87,520- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.89,400- மதிப்பிலான இடுபொருட்களையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக 25 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.56,416- மதிப்பிலான இடுபொருட்களையும் என ஆகமொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் கூறியதாவது, தமிழக அரசு இந்த வறட்சியான காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக 76,320 விவசாயிகளுக்கு ரூ.55 கோடி வறட்சி நிவாரணமாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளுக்காக நமது மாவட்டத்தில் 9 உலர் தீவன கிடங்குகள் மூலம் சலுகை விலையில் ரூ.2- க்கு வைக்கோல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 6 உலர் தீவன கிடங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளே மாட்டு தீவனங்களை தயாரிக்க பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 220 மெட்ரிக் டன் தீவனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதம்பரம் பகுதியில் கடல்நீர் உள்ளே புகுந்து குடிநீர் உப்பாவதை தடுப்பதற்காக தடுப்பணை அமைத்தல் போன்ற நீண்டகால திட்டங்களுக்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 130 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் கடலூர் மாவட்டத்தில் ரூ.140.01 கோடி மதிப்பீட்டில் 5 வெள்ளத்தடுப்பு பணிகளை துவக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள 545 ஏரிகள் மற்றும் குளங்களில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் வீடு கட்டுவோர்கள் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. பேச்சு
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் இந்த மனுநீதிநாள் முகாமில் தெரிவித்ததாவது,கலெக்டர் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களை தேர்தெடுத்து இந்த மனுநீதிநாள் முகாமை நடத்துவதை நினைத்து பெருமகிழ்ச்சியடைகிறேன். கலெக்டர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கிராம மக்கள், விவசாயிகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பின் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள இடங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். கலெக்டர் உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். சிதம்பரம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணையும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையும் கட்ட கோரிக்கை வைத்துள்ளேன். கலெக்டர் அரசின் பரிசீலினைக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
கலெக்டருக்கு நன்றி
நஞ்சை மகத்துவாழ்க்கை கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா மாதந்தோறும் வழங்கும் முதியோர் உதவித்தொகையை ரூ.1000- மாக உயர்த்தி வழங்கினார்கள். இதனால் லட்சக்கணக்கான முதியோர்கள் பயனடைந்து வருகிறார்கள். கலெக்டர் மிகவும் உத்வேகத்துடன் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகான முனைப்புடன் செயல்பட்டு வருவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்இந்த மனுநீதிநாள் முகாமினை முன்னிட்டு ஏற்கனவே 148 மனுக்கள் பெறப்பட்டு அதில் 43 தகுதியான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 96 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இன்று 79 மனுக்கள் வரப்பெற்றது. அவைகளின்மீது விதிகளின்படி பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்து.இந்த மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் மகேஷ் இந்த மனுநீதிநாள் முகாம் சிறப்புற நடைபெறுவதற்கான பணிகளை மேற்கொண்டார்.
பலர் பங்கேற்பு
இந்த மனுநீதிநாள் முகாமில் இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) கனகசபை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கிருபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கு.மதிவாணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, துணை மேலாளர் (தாட்கோ), சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குநர், அரசுத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வீகம், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.