எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
கலெக்டர் , சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000-ம் பெறுவதற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.20000- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், வருவாய்த்துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.2,87,520- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.89,400- மதிப்பிலான இடுபொருட்களையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக 25 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.56,416- மதிப்பிலான இடுபொருட்களையும் என ஆகமொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் கூறியதாவது, தமிழக அரசு இந்த வறட்சியான காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக 76,320 விவசாயிகளுக்கு ரூ.55 கோடி வறட்சி நிவாரணமாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளுக்காக நமது மாவட்டத்தில் 9 உலர் தீவன கிடங்குகள் மூலம் சலுகை விலையில் ரூ.2- க்கு வைக்கோல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 6 உலர் தீவன கிடங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளே மாட்டு தீவனங்களை தயாரிக்க பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 220 மெட்ரிக் டன் தீவனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதம்பரம் பகுதியில் கடல்நீர் உள்ளே புகுந்து குடிநீர் உப்பாவதை தடுப்பதற்காக தடுப்பணை அமைத்தல் போன்ற நீண்டகால திட்டங்களுக்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 130 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் கடலூர் மாவட்டத்தில் ரூ.140.01 கோடி மதிப்பீட்டில் 5 வெள்ளத்தடுப்பு பணிகளை துவக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள 545 ஏரிகள் மற்றும் குளங்களில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் வீடு கட்டுவோர்கள் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. பேச்சு
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் இந்த மனுநீதிநாள் முகாமில் தெரிவித்ததாவது,கலெக்டர் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களை தேர்தெடுத்து இந்த மனுநீதிநாள் முகாமை நடத்துவதை நினைத்து பெருமகிழ்ச்சியடைகிறேன். கலெக்டர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கிராம மக்கள், விவசாயிகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பின் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள இடங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். கலெக்டர் உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். சிதம்பரம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணையும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையும் கட்ட கோரிக்கை வைத்துள்ளேன். கலெக்டர் அரசின் பரிசீலினைக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
கலெக்டருக்கு நன்றி
நஞ்சை மகத்துவாழ்க்கை கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா மாதந்தோறும் வழங்கும் முதியோர் உதவித்தொகையை ரூ.1000- மாக உயர்த்தி வழங்கினார்கள். இதனால் லட்சக்கணக்கான முதியோர்கள் பயனடைந்து வருகிறார்கள். கலெக்டர் மிகவும் உத்வேகத்துடன் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகான முனைப்புடன் செயல்பட்டு வருவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்இந்த மனுநீதிநாள் முகாமினை முன்னிட்டு ஏற்கனவே 148 மனுக்கள் பெறப்பட்டு அதில் 43 தகுதியான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 96 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இன்று 79 மனுக்கள் வரப்பெற்றது. அவைகளின்மீது விதிகளின்படி பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்து.இந்த மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் மகேஷ் இந்த மனுநீதிநாள் முகாம் சிறப்புற நடைபெறுவதற்கான பணிகளை மேற்கொண்டார்.
பலர் பங்கேற்பு
இந்த மனுநீதிநாள் முகாமில் இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) கனகசபை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கிருபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கு.மதிவாணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, துணை மேலாளர் (தாட்கோ), சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குநர், அரசுத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வீகம், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சென்னை அணியில் இணையும் லிவிங்ஸ்டன் - தேஷ்பாண்டே..!
14 Nov 2025சென்னை: ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
14 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
14 Nov 2025திண்டுக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2025.
14 Nov 2025 -
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட துருக்கி நபர்
14 Nov 2025புதுடெல்லி: டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டது துருக்கியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
-
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
14 Nov 2025மதுரை : நித்தியானந்தா சீடர்கள் ஆசிரிமத்தை விட்டு வெளியேற்றக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் ராஜபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
-
மியான்மர் கலவரப்படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு
14 Nov 2025சென்னை: மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 4 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி: காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி: எடப்பாடி பழனிசாமி
14 Nov 2025சென்னை : காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
கொல்கத்தா முதல் டெஸ்ட்: பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி
14 Nov 2025கொல்கத்தா: கொல்கத்தா முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது.
-
குழந்தைகள் தினம்: இ.பி.எஸ். வாழ்த்து
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் கட்சி வேட்பாளர்
14 Nov 2025டெல்லி: பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
மாமல்லபுரம் அருகே பரபரப்பு: கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்
14 Nov 2025செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி
14 Nov 2025சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயனுக்கு தி.மு.க. கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
பயிற்சியாளராக சவுதி நியமனம்
14 Nov 202519-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
டெல்லி குண்டுவெடிப்புக்கும் மும்பை தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு..!
14 Nov 2025டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியு
-
இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதிப்பு
14 Nov 2025வாஷிங்டன்: இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.
-
ஐ.பி.எல். லக்னோ அணியில் ஷமி..?
14 Nov 2025லக்னோ: இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: உமர் நபயின் வீடு தகர்ப்பு
14 Nov 2025காஷ்மீர் : டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட உமரின் வீடு தகர்க்கப்பட்டது.
-
பீகாரின் ஒரே முதல்வர் நிதிஷ்குமார் தான் : ஆளுங்கட்சியின் பதிவு உடனடி நீக்கம்
14 Nov 2025டெல்லி: பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
-
ஜம்மு-காஷ்மீர் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சி தோல்வி
14 Nov 2025டெல்லி : ஜம்மு - காஷ்மீர் இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
-
மஹுவா சட்டசபை தொகுதியில் லல்லுவின் மூத்த மகன் தோல்வி
14 Nov 2025டெல்லி: மஹுவா தொகுதியில் தொகுதியில் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியடைந்துள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்
14 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில் காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை போலீசார் நா
-
புராதன சின்னங்கள் ஆணையம்: தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
14 Nov 2025திருவண்ணாமலை : புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது
14 Nov 2025சியோல்: தென்கொரிய முன்னாள் பிரதமரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆசிய வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
14 Nov 2025டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.


