முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணமங்கலம் பேரூராட்சியில் பசுமை வீடு திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஆணை: அமைச்சர் சேவூர் எஸ்.இ ராமச்சந் திரன் வழங்கினார்

திங்கட்கிழமை, 22 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியைச் சேர்ந்த 8 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆணைகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினார்.

பசுமை வீடுகள்

இதுவரை கிராம பகுதிகளில் அரசு பசுமை வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் பசுமை வீடுகள் திட்டத்தினை விரிவுபடுத்தப்பட்டது. இதன்கீழ் ஆரணி வட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பேரூராட்சியில் முதல்கட்டமாக பசுமைவீடு திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளை தேர்வு செய்து அதற்கான ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் வழக்கறிஞர் க.சங்கர், அ.கோவிந்தராசன், நகரசெயலாளர் பாண்டியன், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பேரவை நிர்வாகி பாரிபாபு, முன்னாள் பேரூராட்சித்தலைவர் சரவணன், தனிஅலுவலர் கணேசன், முன்னாள் ஒன்றியகவுன்சிலர் திருமால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்