முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்துறை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் 7 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதில், 1. ஆதனக்குறிச்சி - பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மகளிர் விதவை (முஸ்லிம் இனத்தவர்களை தவிர), 2. பெரியாக்குறிச்சி - பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இனத்தவர், (முன்னுரிமையுடைவர்) 3. கீழமாளிகை - தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 4.நமங்குணம் - மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், 5. பொன்பரப்பி - பிற்படுத்தப்பட்டோர் மகளிர் மட்டும் (முஸ்லிம் இனத்தவர் தவிர), 6. துளார் - பொதுப்பிரிவினர் மகளிர், 7. வஞ்சினபுரம் - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் இனத்தவர் தவிர) முன்னுரிமையுடையவர் ஆகிய பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்ப்படவுள்ளன.

விண்ணப்பிக்கலாம்

மேற்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு குறிப்பிட்ட இனத்தவர்கள் மற்றும் செந்துறை வட்டத்தை மட்டும் வசிப்பிடமாக கொண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றும், 21 வயது நிரம்பியவராகவும், பொதப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராகவும், தமிழில் எழுத படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்திருத்தல் கூடாது, குற்றவியல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவராக இருத்தல் கூடாது, நேர்காணுக்கு அழைக்கும் போது நன்னடத்தை சான்று உடற்தகுதிக்கான அரசு மருத்துவரிடம் பெற்ற சான்று, கல்வித்தகுதிக்கான சான்றுகள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதற்கான பதிவு அட்டை ஆகியன சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பதவிக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்ட தகுதியுடைய, அந்தந்த வட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் தங்கள் விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் பெயர், முகவரி கல்வித்தகுதி பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு, நகல் சான்றிதழ்களை இணைத்து சுயமுகவரியிட்ட ரூ.30-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 24.05.2017 முதல் 31.05.2017 அன்று மாலை 05.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளிற்கு பிறகு வரும் விண்ணப்பங்களும், நேரில் வரும் விண்ணப்பங்களும் எக்காரணத்தை முன்னிட்டு ஏற்க இயலாது என செந்துறை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்