முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 2.80 கோடி பாடப்புத்தகங்கள் 7 -ம் தேதி வழங்கப்படும் - தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு 2 கோடியே 80 லட்சம் மதிப்பிலான இலவச பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவை அனைத்தும் பள்ளிகள் திறந்த 7 ம்தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அரசுச்செய்திக்குறிப்பு  வருமாறு,

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 1 முதல் 12 வகுப்புகளுக்கு தேவையானவிலையில்லா பாடநூல்கள் மற்றும் விற்பனை பாடநூல்களை கீழ்க்கண்டவாறு அச்சிட்டு தட்டுப்பாடின்றி தமிழ்நாடு முழுவதும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

1 முதல் 9 வகுப்பு வரை விலையில்லா பாடநூல்கள் 1.22 கோடி பிரதிகள (முதல் பருவம் மட்டும்) விற்பனை பாடநூல்கள் 79.77 இலட்சம் பிரதிகள பிற மொழி பாடநூல்கள் 1.35 இலட்சம் பிரதிகள 10ம் வகுப்பு (ஆண்டு பதிப்பு) விலையில்லா பாடநூல்கள் 39.48 இலட்சம் பிரதிகள விற்பனை பாடநூல்கள் 15.51 இலட்சம் பிரதிகள

11ம் வகுப்பு (ஆண்டு பதிப்பு) விலையில்லா பாடநூல்கள் 59.12 இலட்சம் பிரதிகள

விற்பனை பாடநூல்கள் 20.50 இலட்சம் பிரதிகள 12ம் வகுப்பு (ஆண்டு பதிப்பு) விலையில்லா பாடநூல்கள் 59.45 இலட்சம் பிரதிகள விற்பனை பாடநூல்கள் 23.59 இலட்சம் பிரதிகள விலையில்லா பாடநூல்கள்:விலையில்லா பாடநூல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட 67 கல்வி மாவட்டஅலுவலகங்களின் தேவைக்கு ஏற்ப 100 சதவீதம் அனுப்பப்பட்டு அப்பாடநூல்கள் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக நேரடியாக அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜூன் 7ம் நாள் பள்ளிதிறக்கும்போது பாடநூல்கள் உறுதியாக மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள்\எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் விற்பனை பாடநூல்களை சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு 12,240 பள்ளிகள

பாடநூல்களின் தேவையை ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். அதற்கேற்ப பாடநூல்கள்வழங்கப்பட்டு வருகிறது.பாடநூல் பெறுவதற்கான இணையதளம http: \\www.textbookcorp..in தமிழ்நாட்டிலுள்ள இக்கழக 22 வட்டார கிடங்குகளிலும் மற்றும் சென்னையிலுள்ளபிரதான கிடங்கிலும் விற்பனைக்கான பாடநூல்கள் 100 சதவீதம் இருப்புவைக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பாடநூல்கள் கடந்த 14 ம்தேதியிலிருந்துஇணையதளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 1 முதல் 10 வகுப்பிற்கான தமிழ் பாடநூல்களின் விற்பனை , கடந்த 25 ம்தேதி முதல் நடைபெற்று வருகின்றது.1 முதல் 9 வகுப்பு வரையிலான பாடநூல்கள் 23.ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.11 ம் வகுப்புக்கான பாடநூல்கள் 26.ம்தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இணையதளத்தில் பதிவு செய்த பள்ளிகளுக்கு 22 வட்டார அலுவலகங்கள் மூலமாகபாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

•சுய நிதி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 27.ம்தேதி வரை ரூ.39.13 கோடி மதிப்பில் பாடநூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. • பாடநூல்களை இணைய தளத்தின் மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் தனிநபர்கள் அவர்கள் குறிப்பிடும் முகவரியிலேயே அஞ்சல் வழியாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது சேவை மையம் மூலமாகவும் பாடநூல்களை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்த பாடநூல்கள் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்பதால் விற்பனை நோக்கில் ஒரே தலைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடநூல்களை பதிவு செய்த வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் செயல்  தடுக்கப்பட்டுள்ளது. இக்கழக தலைமையிடத்தில் (சென்னை) பாடநூல்கள் விற்பனைக்கென பிரத்யோகவிற்பனை மையங்கள் ஏற்படுத்தி பாடநூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமை நூலகத்திற்கும் போட்டித்தேர்விற்கு பயன்படும் வண்ணம் 6முதல் 12 வகுப்புவரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல்கள்வழங்கப்பட்டுள்ளன. •அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாடநூல் விற்பனை நிலையம் ஒன்றினை அமைக்கும்நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து