முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்மேனி மயானத்தில் நடைபெற்று வரும் மராமத்துப்பணிகள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,, ஆய்வு

திங்கட்கிழமை, 29 மே 2017      மதுரை
Image Unavailable

துரை.- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்;.1 வார்டு எண்.19க்குட்பட்ட பொன்மேனி - மாடக்குளம் மெயின் ரோட்டில் உள்ள பொன்மேனி மயானத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை ஆணையாளர்  சந்தீப் நந்தூரி   தலைமையில்   கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜீ    ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது : 
 நீர்நிலை புறம்போக்கு, வாய்க்கால்கள் மற்றும் மயான ஆக்கிரமிப்புக்கள் எத்தனை ஆண்டு காலத்திற்கு முன்பாக இருந்தாலும் உடனடியாக அப்புறப்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மாண்புமிகு அம்மா அவர்கள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்கள், அதன்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நீர்நிலை, மயான ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பொன்மேனியில் உள்ள  மயானத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த எரியூட்டு மேடையை மாற்றி கான்கீரிட் மேற்கூரையுடன் எரியூட்டு மேடை அமைத்தல், தங்கும் அறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மயானத்தில் சுமார் 14 சென்ட் அளவிற்கு தனியார் பட்டா பெற்றுக்கொண்டு விரிவாக்க பணிக்கு தடை செய்வதாகவும், ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் பொன்மேனி நலச்சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். அதன்படி வரைபடம் மூலம் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மயான இடம் மீட்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் மயான ஆக்கிரமிப்புக்கள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகள் அம்ருட் திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தப்பட்டு மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பொன்மேனி பகுதியில் குடியிருப்புக்கள் அதிகளவில் உள்ளதால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த மயானத்தை நவீன மின் மயானமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். அதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி கோச்சடையில் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நிழற்குடை அமைக்கும் பணியினை பார்வையிட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்  அரசு, உதவி செயற்பொறியாளர்  முருகேசபாண்டியன், வட்டாட்சியர்  சிவபாலன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், சுகாதார அலுவலர்  விஜயகுமார் பொறியாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து