எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் இம்மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி விகிதத்தினை அதிகரிப்பது தொடர்பாக அரசு/நிதி உதவி/சுயநிதி (மெட்ரிக் நீங்கலாக) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,
மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு மூலமாக சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும். 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்ச்சியை உருவாக்கி உயர் மதிப்பெண் பெறும் வகையில் அதிகாரிகள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அப்துல்கலாம் 2020 ல் உள்ளோர்களை அழைத்து வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
பெற்றோரிடம் விழிப்புணர்வு
10,11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களையும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வைப்பதற்காக தினந்தோரும் காலையில் சிறு தேர்வுகள் அனைத்துப்பள்ளிகளிலும் நடத்துதல், மேலும் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்கனவே நடைபெறும் தேர்வுகளுடன் அலகு தேர்வுகள் நடத்தப்படவேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி, பெற்றோரிடம் விழிப்புணர்வை உருவாக்கி மாணவர்களின் வருகையினை 100 சரிசெய்து, கற்றல் திறன் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
திடீர் ஆய்வு
அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் பணிகள், அனைத்துப் பாடங்களையும் கற்பித்தல், கற்றல் அடைவினை மேம்படுத்தல் ஆகியவற்றை கண்காணிக்க ஆய்வு அலுவலர், தலைமையாசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் கொண்ட குழுவினை அமைத்து முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென பள்ளிக்கு சென்று ஆய்வு செய்யவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு நடனம், பாட்டு, இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற இடங்களில் தனியார் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளித்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். பள்ளி அளவில் விளையாட்டுப்போட்டிகளில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறக்கூடிய வகையில் சிறப்பு பயிற்சிகள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் நடத்தப்படவேண்டும். புதிய மாணவர்கள் சேர்க்கையை பொருத்த அளவில் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்கும் பொருட்டு மாணவர்களின் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் சேர்க்கை செய்ய கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேர்மை அங்காடி
மாணவர்களுடைய நற்பண்புகளை வளர்க்கும் விதமாக பரிசோதனை அடிப்படையில் நேர்மை அங்காடி சில பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது. அதனுடைய செயல்பாட்டினை பொருத்து அனைத்துப்பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும். வாசிப்பு பாடவேளையை கட்டாயமாக்கப்படும். மேலும் மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் போது செய்தி தாள் வாசிப்பதற்கு ஒதுக்கப்படவேண்டும். பள்ளிவாளாகம் சுத்தம் செய்யப்பட்டு பள்ளித்திறக்கும் முதல் நாளன்றே விலையில்லா பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கி கற்றல் கற்பித்தல் பணிகள் தொடங்கப்படவேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
முதன்மை மாவட்டமாக திகழ
அறிவியல் கண்காட்சி, கலை இலக்கிய விழா, இலக்கிய மன்றம், போட்டிகள் மற்றும் மன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் பங்குபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இக்கல்வியாண்டினை முழுத்தேர்ச்சி கல்வியாண்டாக மாற்றி கடலூர் மாவட்டம் கல்வியின் தேர்ச்சி விகிதத்தில் முதன்மை மாவட்டமாக திகழ தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவ/மாணவிகள் ஆகியோரை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்
பலர் பங்கேற்பு
இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர் ஜி.குமாரசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.