எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் இம்மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி விகிதத்தினை அதிகரிப்பது தொடர்பாக அரசு/நிதி உதவி/சுயநிதி (மெட்ரிக் நீங்கலாக) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,
மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு மூலமாக சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும். 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்ச்சியை உருவாக்கி உயர் மதிப்பெண் பெறும் வகையில் அதிகாரிகள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அப்துல்கலாம் 2020 ல் உள்ளோர்களை அழைத்து வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
பெற்றோரிடம் விழிப்புணர்வு
10,11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களையும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வைப்பதற்காக தினந்தோரும் காலையில் சிறு தேர்வுகள் அனைத்துப்பள்ளிகளிலும் நடத்துதல், மேலும் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்கனவே நடைபெறும் தேர்வுகளுடன் அலகு தேர்வுகள் நடத்தப்படவேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி, பெற்றோரிடம் விழிப்புணர்வை உருவாக்கி மாணவர்களின் வருகையினை 100 சரிசெய்து, கற்றல் திறன் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
திடீர் ஆய்வு
அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் பணிகள், அனைத்துப் பாடங்களையும் கற்பித்தல், கற்றல் அடைவினை மேம்படுத்தல் ஆகியவற்றை கண்காணிக்க ஆய்வு அலுவலர், தலைமையாசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் கொண்ட குழுவினை அமைத்து முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென பள்ளிக்கு சென்று ஆய்வு செய்யவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு நடனம், பாட்டு, இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற இடங்களில் தனியார் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளித்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். பள்ளி அளவில் விளையாட்டுப்போட்டிகளில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறக்கூடிய வகையில் சிறப்பு பயிற்சிகள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் நடத்தப்படவேண்டும். புதிய மாணவர்கள் சேர்க்கையை பொருத்த அளவில் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்கும் பொருட்டு மாணவர்களின் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் சேர்க்கை செய்ய கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேர்மை அங்காடி
மாணவர்களுடைய நற்பண்புகளை வளர்க்கும் விதமாக பரிசோதனை அடிப்படையில் நேர்மை அங்காடி சில பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது. அதனுடைய செயல்பாட்டினை பொருத்து அனைத்துப்பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும். வாசிப்பு பாடவேளையை கட்டாயமாக்கப்படும். மேலும் மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் போது செய்தி தாள் வாசிப்பதற்கு ஒதுக்கப்படவேண்டும். பள்ளிவாளாகம் சுத்தம் செய்யப்பட்டு பள்ளித்திறக்கும் முதல் நாளன்றே விலையில்லா பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கி கற்றல் கற்பித்தல் பணிகள் தொடங்கப்படவேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
முதன்மை மாவட்டமாக திகழ
அறிவியல் கண்காட்சி, கலை இலக்கிய விழா, இலக்கிய மன்றம், போட்டிகள் மற்றும் மன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் பங்குபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இக்கல்வியாண்டினை முழுத்தேர்ச்சி கல்வியாண்டாக மாற்றி கடலூர் மாவட்டம் கல்வியின் தேர்ச்சி விகிதத்தில் முதன்மை மாவட்டமாக திகழ தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவ/மாணவிகள் ஆகியோரை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்
பலர் பங்கேற்பு
இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர் ஜி.குமாரசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என பெயர் சூட்டினார் முதல்வர்
11 Jan 2026சென்னை, ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
-
யாரிடமும் பேதம் காட்டாமல், யாரையும் பிரித்து பார்க்காத ஒரே மொழி 'தமிழ்' மொழி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
11 Jan 2026சென்னை, தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எப்பொழுதுமே கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக அமைச்சர் தகவல்
11 Jan 2026சென்னை, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்ப
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
கிரோக் ஏ.ஐ. தள விவகாரம்: இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக எக்ஸ் நிறுவனம் உறுதி
11 Jan 2026புதுடெல்லி, எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன கிரோக் தளம் தொடர்பான புகாரில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ள
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jan 2026சென்னை, தமிழகத்தில் கடலூர், அரியலூர் உள்ளிட்ட இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்மையை ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள்: இ.பி.எஸ்.
11 Jan 2026சென்னை, ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
17 வணிக செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்
11 Jan 2026சென்னை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.
-
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Jan 2026சென்னை, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் ம
-
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
11 Jan 2026தெக்ரான், ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
11 Jan 2026சென்னை, மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
குஜராத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் : சவுரியா யாத்திரையிலும் பங்கேற்பு
11 Jan 2026அகமதாபாத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி, காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார்.
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


