எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் இம்மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி விகிதத்தினை அதிகரிப்பது தொடர்பாக அரசு/நிதி உதவி/சுயநிதி (மெட்ரிக் நீங்கலாக) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,
மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு மூலமாக சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும். 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்ச்சியை உருவாக்கி உயர் மதிப்பெண் பெறும் வகையில் அதிகாரிகள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அப்துல்கலாம் 2020 ல் உள்ளோர்களை அழைத்து வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
பெற்றோரிடம் விழிப்புணர்வு
10,11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களையும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வைப்பதற்காக தினந்தோரும் காலையில் சிறு தேர்வுகள் அனைத்துப்பள்ளிகளிலும் நடத்துதல், மேலும் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்கனவே நடைபெறும் தேர்வுகளுடன் அலகு தேர்வுகள் நடத்தப்படவேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி, பெற்றோரிடம் விழிப்புணர்வை உருவாக்கி மாணவர்களின் வருகையினை 100 சரிசெய்து, கற்றல் திறன் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
திடீர் ஆய்வு
அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் பணிகள், அனைத்துப் பாடங்களையும் கற்பித்தல், கற்றல் அடைவினை மேம்படுத்தல் ஆகியவற்றை கண்காணிக்க ஆய்வு அலுவலர், தலைமையாசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் கொண்ட குழுவினை அமைத்து முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென பள்ளிக்கு சென்று ஆய்வு செய்யவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு நடனம், பாட்டு, இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற இடங்களில் தனியார் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளித்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். பள்ளி அளவில் விளையாட்டுப்போட்டிகளில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறக்கூடிய வகையில் சிறப்பு பயிற்சிகள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் நடத்தப்படவேண்டும். புதிய மாணவர்கள் சேர்க்கையை பொருத்த அளவில் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்கும் பொருட்டு மாணவர்களின் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் சேர்க்கை செய்ய கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேர்மை அங்காடி
மாணவர்களுடைய நற்பண்புகளை வளர்க்கும் விதமாக பரிசோதனை அடிப்படையில் நேர்மை அங்காடி சில பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது. அதனுடைய செயல்பாட்டினை பொருத்து அனைத்துப்பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும். வாசிப்பு பாடவேளையை கட்டாயமாக்கப்படும். மேலும் மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் போது செய்தி தாள் வாசிப்பதற்கு ஒதுக்கப்படவேண்டும். பள்ளிவாளாகம் சுத்தம் செய்யப்பட்டு பள்ளித்திறக்கும் முதல் நாளன்றே விலையில்லா பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கி கற்றல் கற்பித்தல் பணிகள் தொடங்கப்படவேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
முதன்மை மாவட்டமாக திகழ
அறிவியல் கண்காட்சி, கலை இலக்கிய விழா, இலக்கிய மன்றம், போட்டிகள் மற்றும் மன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் பங்குபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இக்கல்வியாண்டினை முழுத்தேர்ச்சி கல்வியாண்டாக மாற்றி கடலூர் மாவட்டம் கல்வியின் தேர்ச்சி விகிதத்தில் முதன்மை மாவட்டமாக திகழ தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவ/மாணவிகள் ஆகியோரை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்
பலர் பங்கேற்பு
இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர் ஜி.குமாரசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாளில் வினியோகம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்
02 Jan 2026சென்னை, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.
-
ரஷ்ய பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலி
02 Jan 2026கீவ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
-
நாமக்கல்லில் சிறுவன் உயிரிழப்பு: இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
02 Jan 2026சென்னை, நாமக்கல்லில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சென்னை வந்த துணை ஜனாதிபதிக்கு துணை முதல்வர் உதயநிதி வரவேற்பு: இன்று வேலூர் பொற்கோவிலுக்கு பயணம்
02 Jan 2026சென்னை, சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் வரவேற்றார்.
-
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
02 Jan 2026சென்னை, முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.
-
ம.பி.யில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
02 Jan 2026இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
-
ஆஷஸ் சிட்னி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
02 Jan 2026லண்டன், ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
02 Jan 2026நாகர்கோவில், தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
நீலகிரியில் கனமழை: உதகை மலை ரயில் சேவை ரத்து
02 Jan 2026நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட ரயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது.
-
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் நேரில் விநியோகம்: இல்லம் தேடி சென்று வழங்க உத்தரவு
02 Jan 2026சென்னை, சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்
-
மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க எலான் மஸ்க் முடிவு
02 Jan 2026நியூயார்க், மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை நடப்பு ஆண்டில் (2026) அதிகரிக்க திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க இ.பி.எஸ். திட்டம்
02 Jan 2026சென்ன, வருகிற 4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
02 Jan 2026கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் தோரட்டம் நேற்று (ஜன.2) நடைபெற்றது.
-
அர்ஜுன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்: யுவராஜ் தந்தை யோசனை
02 Jan 2026மும்பை, அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யுவராஜ் தந்தை யோசனை தெரிவித்துள்ளார்.
-
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 300 பேருக்கு முதல்கட்டமாக வருகிற பிப்ரவரி மாதம் வீடுகள் ஒப்படைப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
02 Jan 2026வயநாடு, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களில் 300 பேருக்கு முதல்கட்டமாக அடுத்த மாதம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக கேரள முதல்வர்
-
தைவான் விரைவில் சீனாவுடன் இணையும்: அதிபர் ஜின்பிங் உறுதி
02 Jan 2026பீஜிங், தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
-
கதை திருடப்பட்டதாக புகார்: ‘பராசக்தி’ படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
02 Jan 2026சென்னை, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
-
வைகோவுக்கு வயது 28-ஆ 82 வயதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆச்சரியம்
02 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவுக்கு இப்போது 82 வயதா? அல்லது 28 வயதா என்று எனக்கு சந்தேகம் வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
சென்னையில் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை வழங்கினார் துணை ஜனாதிபதி
02 Jan 2026சென்னை, ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.
-
தவறாக புரிந்து கொள்வதை தடுக்க மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்வது முக்கியம்: ஜெய்சங்கர்
02 Jan 2026சென்னை, உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கான வழி, தொடர்புகொள்வதுதான்.
-
என் உடல்நிலை சீராகவே உள்ளது: ட்ரம்ப் விளக்கம்
02 Jan 2026வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உடல்நிலை பற்றி பல்வேறு விவாதங்களும் எழுந்துவரும் நிலையில்.
-
தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது
02 Jan 2026சென்னை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜன.2) சென்னையில் பவுனுக்கு ரூ.1,120 என உயர்ந்துள்ளது.
-
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே நியமனம்
02 Jan 2026சென்னை, தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா நேற்று அறிவித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-01-2026
03 Jan 2026 -
கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு விருந்தளித்த ஆஸ்திரேலிய பிரதமர்
02 Jan 2026சிட்னி, புத்தாண்டை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை நேரில் சந்தித்தார்.


