முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக அல்பி ஜான் வர்க்கீஸ் பொறுப்பேற்பு

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜாமணி திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக 2013 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான அல்பி ஜான் வர்க்கீஸ் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு  பொறுப்பேற்றுக் கொண்டார்.

 இவரைப் பற்றி....

அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வில் 3ம் இடம் பிடித்த இவரது பூர்விகம் கேரளா மாநிலம் கொச்சின் ஆகும். கடலுாரில் சார் ஆட்சியராக பதவி வகித்தவர்.பின்னர் தேவகோட்டை சார் ஆட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,

புகார் தெரிவிக்க...

துாத்துக்குடி மாநகரின் குடிநீர் உட்பட அடிப்படை வசதி குறித்து அதிகாரிகளின் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.  பொதுமக்கள் குறைகளை வாட்ஸ்ஆப், இமெயில் மூலம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் புகாருக்காக புதிய வாட்ஸ்ஆப் எண் வரும் புதன்கிழமை முதல் செயல்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி ஆணையர்கள் சரவணன், காந்திமதி மற்றும் ஆணையர் உதவியாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து