முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டங்கள் தயாரித்தல் குறித்த வட்டார அளவிலான அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்: கலெக்டர்மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      நாமக்கல்
Image Unavailable

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டங்கள் தயாரித்தல் குறித்த வட்டார அளவிலான அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று (13.06.2017) நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு கலெக்டர்மு.ஆசியா மரியம் தலைமையேற்று முகாமினை துவக்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது,

பயிற்சி முகாம்

 

கிராமங்களை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு கிராம மக்களிடம் நேரிடையாக கருத்துக்களை அறிந்து கலந்தாலோசித்து எந்த கிராமத்திற்கு எம்மாதிரியான திட்டங்கள் தேவை என்பதை அறிந்து அலுவலர்கள் திட்டங்களை தயாரித்திட வேண்டும். திட்டமிடுதல் மிகச்சரியாக இருந்தால்தான் அத்திட்டம் முழு வெற்றியடைய முடியும். மக்களுக்கு தேவையான திட்டங்களை தேர்ந்தெடுத்து அதற்கான திட்ட வரைவை அலுவலர்கள் முழுமையாக தயாரித்திட வேண்டும். அதற்கு முன்னர் கிராமங்களைப் பற்றிய தெளிவான விவரங்களை தெரிந்து கொண்டு அக்கிராமத்திற்கு தேவையான திட்டத்தை அறிந்து அத்திட்டம் மக்களுக்கு நீண்ட நாள் பலன் தரக்கூடியதாக அமையுமாறு அத்திட்டங்களை தயாரித்து வெளியிட வேண்டும். முன்பெல்லாம் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ஏராளமான திட்டங்கள் தயாரித்து கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் பொதுக்கழிப்பிட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இல்லங்கள் தோறும் தனிநபர் கழிப்பிடம் கட்டும் பணியும் தொடர்;ந்து நடைபெற்று வருகின்றது. மக்களின் சுகாதாரத்திற்கும், சுற்றுப்புற சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இத்தகைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது கிராமங்கள்தோறும் தொடங்கப்படவுள்ள கிராம ஊராட்சியின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து திட்டமிடும்பொழுது அக்கிராமத்திற்கு தேவையான மிக முக்கியமான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்ட வரைவு தயாரித்திட வேண்டும். அத்தகைய திட்டங்கள் மக்களின் எதிர்கால தேவையை நிறைவேற்றுவதாகவும், எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருத்தல் வேண்டும். கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித்திட்டங்களை திட்டமிடுவதற்காக இந்த பயிற்சி முகாம் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களை கொண்டு கிராம வளர்ச்சிக்கான திட்டங்களையும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களையும் அலுவலர்கள் தயாரித்து அரசிற்கு வழங்கிட வேண்டும். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து மக்களோடு இணைந்து திட்ட மதிப்பீட்டை தயாரித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர்மு.ஆசியா மரியம் பேசினார்.

இந்த பயிற்சி முகாம் துவக்க விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.சி.மாலதி, மாவட்ட ஊராட்சி செயலர் ம.பிரியா உட்பட வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து