முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிகளை மீறிய கனரக வாகனங்களுக்கு ரூ.2.21லட்சம் அபராதம் விதிப்பு

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திருமங்கலம் நகர் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் விதிகளை மீறிய கனரக வாகனங்களுக்கு ரூ.2.21லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருமங்கலம் நகரின் வழியாக நள்ளிரவு நேரங்களில் விதிகளை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்படுவதாக திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி உத்தரவின் பேரில் திருமங்கலம் டி.எஸ்.பி.,ரமேஷ்பாபு ஆலோசனையின் படி திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிரடியாக வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி திருமங்கலம் வழியே இயக்கப்பட்ட கனரக வாகனங்களை மடக்கிப்பிடித்த போலீசார் அவற்றை திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகஅளவு பாரமேற்றுதல்,கண்கள் கூசும்அளவிற்கு முகப்பு விளக்குகளை எரியவிடுதல்,குடிபோதையில் வாகனங்களை இயக்குதல்,அதிவேகமாகச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 10க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் விதிகளை மீறி இயக்கப்பட்ட அந்த வாகனங்களுக்கு ரூ.2.21லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்படும் என்றும் விதிகளை மீறி இயக்கப்படும் அனைத்து வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வருபவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் நள்ளிரவில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் விதிகளை மீறிய கனரக வாகனங்களுக்கு ரூ.2.21லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு திருமங்கலம் நகரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து