முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் ஆட்டோவும் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதல் நான்கு பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      தேனி
Image Unavailable

பெரியகுளம் -பெரியகுளத்தில் ஆட்டோ மீது பள்ளி பேருந்து மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த நால்வர் பலி. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்.

பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில்குமார். இவருடைய மனைவி கார்த்திகா (36) நேற்று மாலையில் ஒரு ஆட்டோவில் தேனிக்கு புறப்பட்டார். அவருடன் தனது மகள் சகாந்தினி (12) மகன் சசிதர் (7) மற்றும் உறவினர்கள் கயல்விழி (45) இவருடைய மகன் கலையரசன் (15) மகள் மிருளானி (12) ஆகியோர் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை வசந்த் (18) என்பவர் ஓட்டினார். தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது தேனியிலிருந்து பெரியகுளத்திற்கு மாணவ மாணவிகளை இறக்கி விடுவதற்காக வந்து கொண்டிருந்த தனியார் பள்ளி பேரூந்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கலையரசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கார்த்திகா அவருடைய மகள் சகாந்தினி, அவரது  உறவினர் கயல்விழி ஆகியோர் உயிரிழந்தனர். சசிதர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த தென்கரை போலீசார்  தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனரை கைது செய்து  விசாரணை செய்து வருகின்றனர். ஒரே தெருவை சேர்ந்த நான்கு பேர்  இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து