எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. செய்தியாளர்கள் பயணத்தில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பொதுப்பணித்துறையின் சாதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- மக்கள் வாழ்வில் வளம்பெற வேண்டுமென்றால், மாநிலம் செழிக்க வேண்டுமென்றால் மனித வள வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்ற அடிப்படை கொள்கையினை பின்பற்றி எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக்கூடிய வகையில் அனைத்துத் துறைகளின் சார்பில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவின் மூலமாக தமிழக அரசு, குறிப்பாக மாணவ மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கூடங்களில் புதிய கட்டடங்கள், பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் அரசு அலுவலகங்களுக்கு புதுமைத் திட்டங்களை செயல்படுத்திட புதிய கட்டடங்கள், மழை வெள்ளக் காலங்கள் மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க கடலோர பேரிடர் குறைப்பு திட்டத்தின் கீழ் புயல் பாதுகாப்பு மையங்கள், மனித உயிரினம் மட்டுமின்றி கால்நடைகளுக்கும் மருத்துவமனைக் கட்டடங்கள் என காலங்கள் போற்றும் கட்டுமானப் பணிகளை உருவாக்கி வருகிறது. இந்த கட்டடங்கள் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதற்கும், தமிழகத்தின் கட்டடக் கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலமாக கடந்த 5 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு ரூ.13 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் அதிக காற்றோட்ட வசதியுடன் கூடிய வகுப்பறை கட்டடப் பணிகள் மற்றும் நவீன கழிப்பறை கட்டடங்களும், ரூ.4 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில்; நவீன வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய மாணவ மாணவியருக்கான விடுதி கட்டடங்களும், ரூ.11 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக கட்டடம், ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் ராமேஸ்வரத்தில் அரசு விருந்தினர் மாளிகையும், ரூ.6 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் அதி நவீன உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பணியாளர்கள் சிரமமின்றி பணி மேற்கொள்ளும் வகையில் பொது மக்கள் வந்து செல்லும் பல்வேறு அரசு கட்டடங்களும், ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட கால்நடை மருந்தக கட்டிடங்களும், ரூ.7 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் திருவாடானை மற்றும் முதுகுளத்தூரில் நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் நீதிபதி குடியிருப்பு கட்டடங்கள் என ரூ.51 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் ரூ.57 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் 30 பள்ளிகளில் அதிக காற்றோட்ட வசதியுடன் கூடிய வகுப்பறை கட்டடப் பணிகளும், ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட 4 கால்நடை மருந்தக கட்டிடங்களும், கடலோர பேரிடர் குறைப்பு திட்டத்தின்கீழ் ரூ.62 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டடங்களும், ரூ.29 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரத்தில் யாத்ரிகர்கள் தங்கும் விடுதி கட்டடமும், ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசுத் துறைக்கான 7 அலுவலக கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய மாணவ மாணவியருக்கான 3 விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கும், புதிதாக உருவாக்கப்பட்ட கீழக்கரை வருவாய் வட்டத்திற்கு ரூ.2 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை கட்டமைப்பினை மேம்படுத்திடும் நோக்கத்தில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் காலங்கள் போற்றும் வகையில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் கட்டுமானப் பணிகள் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். செய்தியாளர் பயணத்தில் ராமநாதபுரத்தில் ரூ.58 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி பயன்பாட்டில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை உறை விந்து வங்கி கட்டிடத்தினையும், திருப்பாலைக்குடியில் கட்டப்பட்டு வருகின்ற ரூ.2 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தினையும், பழனிவலசையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ்; ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பள்ளி கட்டிடத்தினையும், இரணியன்வலசையில் ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற சமுதாய கூட வடிவமைப்பு கொண்ட பல்நோக்கு புகலிடக் கட்டிடத்தினையும் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் காண்பித்து, திட்டப் பணிகளை விளக்கி கூறினார். செய்தியாளர்கள் பயணத்தில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட செயற்பொறியாளர் அ.தினகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் தி.குருதிவேல்மாறன், உதவி பொறியாளர்கள் ஆர்.பாண்டியராஜன், வி.அருண், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார