எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினியரிங் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து என்ஜினியரிங் கலந்தாய்வு 17-ம் தேதி தொடங்குகிறது.
ஐகோர்ட்டில் மனு
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் முகம்மது ஜலீல். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு தொழில் கல்விகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2006-ன் படி சிறுபான்மை அல்லாத சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இந்த இடங்களில் ஒற்றை சாளர முறையின்படி நிரப்பப்படுகிறது.
காலியாக ...
2007-ம் ஆண்டு மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 784 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 94 ஆயிரத்து 346 இடங்களும், 2008-ம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 680 இடங்களில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 565 இடங்களும், 2009-ம் ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 790 இடங்களும் மட்டுமே நிரப்பப்பட்டன.ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள என்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது மிகவும் குறைந்து விட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2014-ம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் இடங்களும், 2015-ம் ஆண்டு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 83 இடங்களும், 2016-ம் ஆண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரம் இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டன.
22 கல்லூரிகள் மூட ...
சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்கள் பெரும் பகுதி இடங்களை அரசிடம் கலந்தாய்வுக்காக ஒப்படைக்கின்றன. ஆனால் கலந்தாய்வு முடிந்து நிரப்பப்படாத இடங்கள் கடைசி நேரத்தில் அந்த கல்லூரிகளுக்கு திருப்பி ஒப்படைக்கப்படுவதால், அவற்றை கல்லூரி நிர்வாகத்தாலும் நிரப்ப முடிவதில்லை. இதனால் தனியார் சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை. வருவாய் குறைவதால், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இந்தாண்டு மட்டும் 22 என்ஜினியரிங் கல்லூரிகள் மூட விண்ணப்பித்துள்ளன.
தடை விதிக்க ...
நடப்பு கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவுள்ள கலந்தாய்வில் சுமார் 60 சதவீத இடங்கள், அதாவது ஒரு லட்சத்துக்கும் மேலான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள், தங்களது கல்லூரிகளில் உள்ள இடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அல்லது சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களின், அரசுக்கு வழங்கும் இடங்களின் சதவீதத்தை மாற்றியமைக்க வேண்டும். இதுகுறித்து தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கடந்த 7-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என்ஜினியரிங் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் வரும் 27-ந் தேதி நடத்தும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். என் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோரிக்கை நிராகரிப்பு
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, கலந்தாய்வு இல்லாமல் அரசு ஒதுக்கீட்டு இடத்தை கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளேன்’ என்றார். அதற்கு நீதிபதி, என்ஜினியரிங் படிப்புக்கு கலந்தாய்வு கண்டிப்பாக நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் முடியாது’ என்றார். அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, ‘ஏற்கனவே அரசுக்கு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீத இடங்களை வழங்குவதை கல்லூரி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டது. தற்போது அந்த இடங்களை எல்லாம் திருப்பிக் கேட்க முடியாது’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாததத்தையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
கலந்தாய்வு 17-ல் தொடக்கம்
இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜூலை 17-ம் தேதியிலிருந்து என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும். இந்தக் கலந்தாய்வு இணையம் மூலமாக நடத்தப்படும். இக் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 19, 20 ஆகிய நாட்களில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும். இந்த கல்வியாண்டில் என்ஜினியரிங் படிப்பில் சேர 1.47 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை3 min 37 sec ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 1 min ago |
மினி பான் கேக்1 week 19 hours ago |
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பாலியல் வழக்கு விவகாரம்: ரேவண்ணா மீது 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
07 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாக புகார் கொடுத்துள்ளது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எந்த குற்றவாளியும் தப்பக்கூடாது: பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி
07 May 2024புதுடெல்லி : பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
-
சென்னையில் சட்டவிரோத மசாஜ் சென்டர்களுக்கு சீல்: மாநகர காவல்துறை நடவடிக்கை
07 May 2024சென்னை, சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களூக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 60.97 சதவிகிதம் வாக்குப்பதிவு
07 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சூர்யகுமார் யாதவ் அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை
07 May 2024மும்பை : சூர்யகுமார் யாதவ் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
08 May 2024 -
கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
08 May 2024வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார