எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வான்கோழிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவையாகும். வான்கோழி இறைச்சியானது மிருதுவாகவும், சுவை மிக்கதாகவும் உள்ளதால் மக்கள் இதைப் பெருமளவில் விரும்பி உட்கொள்ளுகின்றனர். தமிழ்நாட்டில் வான்கோழி இறைச்சியின் தேவையும் அதற்கான உற்பத்தியும் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
இருப்பினும் தேவைக்கேற்ப வான்கோழி இறைச்சி மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் வான்கோழிகள் விரைவில் வளர்ச்சி பெறுவதாலும், குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக எடை கூடுவதாலும் இது மிகவும் இலாபகரமான தொழிலாக விளங்குகிறது. தற்போது நமது நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் வான்கோழிகள் கிராமப்பகுதிகளில் வீட்டின் புறக்கடைகளில் ஆங்காங்கே வளர்க்கப்படுகின்றன. வான்கோழிகளை பண்ணை முறைகளிலும் வளர்க்கலாம்.
வான்கோழி இனங்கள் : வான்கோழியின் தாயகம் தென் அமெரிக்காவாகும். 15ம் நூற்றாண்டுக்கு பிறகு ஐரோப்பா மற்றும் மற்ற நாடுகளில் வளர்க்க தொடங்கினர். வான்கோழிகள் பெருமளவில் வளர்க்கப்படுவது ஆஸ்திரேலியாவாகும். வான்கோழிகளை பலவகை இனங்கள் என்று சொல்லாமல் வகைகள் என்றே குறிப்பிடுகிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க வகையான வான்கோழிகள் உண்டு.
1. ஹாலந்து வெள்ளை
2. பார்பான் சிவப்பு
3. நார்கான்செட்
4. பிரான்ஸ்
5. பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை
6. ஸ்லேட்
7. நார்போக்
வான்கோழி வளர்ப்பின் நன்மைகள்
• வான்கோழிகள் மற்ற கோழி இனங்களை காட்டிலும் மிக விரைவாக வளர்ச்சி பெறும்.
• குறைந்த தீவனம் உட்கொண்டு குறைந்த நாட்களில் அதிக எடை கூடும்.
• வான்கோழி இறைச்சியானது மிருதுவாகவும், சுவைமிக்கதாகவும் இருக்கும்.
• வான்கோழி முட்டைகள் சுமார் 65 முதல் 70 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும்.
• ஒரு வான்கோழி ஒவ்வொரு மாதமும் 10 முதல் 12 முட்டைகள் வரை இடும்.
• வான்கோழிகளை வீட்டின் புறக்கடைகளிலும் வளர்க்கலாம், பண்ணை முறைகளிலும் வளர்க்கலாம்.
வான்கோழி வளர்ப்பு முறை : அகன்ற மார்புடைய பிரான்ஸ், அகன்ற மார்புடைய வெள்ளை மற்றும் பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை போன்ற இனங்கள் நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகைகளாக கருதப்படுகின்றன. வான்கோழிகளை கீழ்கண்ட முறைகளில் வளர்க்கலாம்.
1. ஆழ்கூள முறை
2. புறக்கடை வளர்ப்பு
3. மேய்ச்சலுடன் கொட்டகை வளர்ப்பு
ஆழ்கூள முறை : கொட்டகைகள் நல்ல காற்றோட்டமான இடங்களில் அமைக்கப்பட்டு தரை சிமெண்டால் அமைக்கப்படவேண்டும். ஆழ்கூள முறையில் காகிதம், மரத்தூள், நிலக்கடலை தோல், நெல் உமி போன்றவைகளை சிமெண்ட் தரையின் 5 முதல் 6 அங்குல உயரத்திற்கு பரப்ப வேண்டும். ஒரு ஆண் வான்கோழிக்கு சுமார் 5 சதுர அடி இடவசதியும் ஒரு பெண் வான்கோழிக்கு 4 சதுர அடி இடவசதியும் தேவைப்படும். வளர்ந்த வான்கோழிகளுக்கு தனி கொட்டகையும், குஞ்சுகள் வளர்ப்பதற்கு தனிகொட்டகையும் அமைத்திட வேண்டும். இம்முறையில் குறைந்தது 200 வான்கோழிகள் கொண்ட பண்ணையாக இருந்தால் மிகுந்த இலாபமுடையதாக அமையும்.
புறக்கடை வளர்ப்பு : இம்முறையில் வான்கோழிகளை பகல் வேளைகளில் வீட்டுப்புற தோட்டத்தில் அல்லது வயல்வெளிகளில் மேயவிட்டு பிற இரவு வேளைகளில் மட்டும் கொட்டகைகளில் அல்லது கூண்டுகளில் அடைத்து வளர்க்கலாம். வீடுகளில் இருக்கும் தானியங்கள், சமையல் அறை கழிவுகள், எஞ்சிய சமைத்த உணவு போன்றவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன. மேலும் தோட்டங்களில் உள்ள கீரைகள், பூச்சிகள், வண்டுகள், களைகளும் போதுமான அளவு கிடைக்கின்றன.
இனவிருத்தி பராமரிப்பு : வான்கோழி பண்ணைகளில் இனவிருத்திக்காக தேவைப்படும் ஆண் மற்றும் பெண் கோழிகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. இனவிருத்திக்காக தேர்வு செய்யப்படும் ஆண் வான்கோழிகள் துரிதமாக வளர கூடியதாகவும், அகன்ற மார்புடனும் இருக்கவேண்டும். பொதுவாக 12 வார வயதிற்குள் அனைத்து ஆண் வான்கோழிகளை விடவும் அதிக எடை அடையக்கூடிய திறன் இருக்க வேண்டும். இறகுகள் வேகமாக வளரக்கூடிய தன்மையுடனும், வால் இறகுகள் நீளமாகவும், 16 முதல் 20 வார வயது அடையும் சமயத்தில் தோகை விரித்து ஆடவும் வேண்டும்.
அதே போல் தேர்ந்து எடுக்கப்படும் பெண் வான்கோழிகள் 12 வார வயது அடையும் சமயத்தில் 2 முதல் 2.5 கிலோ எடை மட்டுமே அடைய வேண்டும். மேலும் பெண் வான்கோழிகள் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து முட்டையிடும் திறன் உடையதாகவும், அடைக்காக்கும் தன்மையில்லாமலும், வேகமாக வளரும் திறன் கொண்டதாகவும் இருக்கவேண்டும். இனவிருத்திக்காக வான்கோழிகளை அவற்றின் தாய் தந்தையாரின் பாரம்பரியம் அறிந்து வாங்கி வளர்ப்பது நல்லது.
வீட்டின் புறக்கடைகளில் வளர்க்கப்படும் வான்கோழிகளை நான்கு பெண்கோழிகளுக்கு ஒரு ஆண் கோழி வீதம் சேர்;த்துவிடவேண்டும். பொதுவாக வான்கோழிகளை 6 முதல் 7 மாத வயதில் முட்டையிட தொடங்கிவிடுகின்றன. வான்கோழி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும் தன்மையுடையது. இதனுடைய அடைக்காலம் 28 நாட்களாகும். வான்கோழிகள் முட்டையிடும் போது முட்டைகளை தினமும் சேகரித்து சேமித்து வைக்க வேண்டும்.
வான்கோழிகள் அடையிருக்கும் இடத்தில் தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். முட்டையிடும் பருவத்தில் அடைபடுக்கவிடாமல் முட்டையிடவைத்தால் ஆண்டு ஒன்றிக்கு 80 முதல் 100 முட்டைகள் இடும். வான்கோழி முட்டைகளை நாட்டுகோழிகளிலும் அடைவைத்து பொறிக்கலாம். ஒரு கோழியில் சுமார் 8 முதல் 10 வான்கோழி முட்டைகளை வைக்கலாம். முட்டைகளை இயந்திரங்களில் வைத்தும் பொறிக்கலாம். ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முட்டைகளை அடைக்காப்பானில் (ஐnஉரடியவழச) வைத்து 29 நாட்களில் குஞ்சுகளை வெளியே எடுத்துவிடலாம்.
வான்கோழி குஞ்சுகள் பராமரிப்பு : கோழிகள் மூலமாக குஞ்சுகள் பொறித்து இருந்தால் தாய் கோழிகளே தம் குஞ்சுகளுக்கு தீவனத்தை பொறுக்கி எடுத்துக் கொள்வதை கற்றுக்கொடுத்துவிடும். இயந்திரங்களின் மூலம் குஞ்சுகள் பொறிக்கும் போது குஞ்சுகளை அடைக்காப்பான் அமைத்து பாராமரிக்க வேண்டும்.
அடைக்காப்பானை ஆங்கிலத்தில் புரூடர் (டீசழழனநச) என்று அழைக்கிறோம். இளம் குஞ்சுகள் பொறித்திலிருந்து 3 வார வயதுவரை அதன் உடல் வெப்பத்தை சீராக பாராமரிக்க ஏதுவாக செயற்கை வெப்பம் விளக்குகள் மூலமாக அளிக்கப்படவேண்டும்.
இதற்காக 1½ அடி உயரத்திற்கு அட்டைகளினாலோ அல்லது துருபிடிக்காத தகட்டினாலோ 6 அடி விட்டத்திற்கு மட்டமாக அமைக்கப்பட வேண்டும். 6 அடி அடைக்காப்பானின் நடுவில் 2 அடி உயரத்தில் 100 வால்ட் மின் விளக்குகள் பொறுத்தி எரியவிடவேண்டும். தரையில் சிறிதளவு நெல் அல்லது கடலை உமியை பரப்பிவிட்டு அதன் மேல் செய்தித்தாள்களை பரப்பி அதன் மேல் குஞ்சுகளை விடலாம். தினமும் செய்தித்தாள்கள் அசுத்தமாகிவிடுவதால் தினமும் தாள்களை மாற்றவேண்டும்.
திறந்த தட்டுகளில் நான்கு இடங்களில் தீவனம் வைத்திடவேண்டும். தண்ணீர் குவளைகளில் சுடவைத்து ஆரவைத்த குடிநீரை வைக்க வேண்டும். 6 அடி விட்டம் உள்ள அடைக்காப்பானுள் 100 லிருந்து 150 குஞ்சுகள் வரை வளர்க்கலாம். குஞ்சுகளுக்கு நாளொன்றுக்கு 5 அல்லது 6 முறை சிறிது சிறிதாக தீவனம் அளிக்கப்பட வேண்டும்.
அடிக்கடி தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு அடைக்காப்பானை பிரித்துவிட்டு பெரிய இடத்தில் ஒரு குஞ்சுக்கு 0.5 சதுர அடி வீதம் இடவசதி அளித்து வளர்க்கலாம். வான்கோழி குஞ்சுகள் 3 வயதிலிருந்து சுமார் 5 வார வயதை அடையும் வரை படிப்படியாக இடவசதியை அதிகரித்து 1 சதுர அடி இடவசதியும் அதற்கு பின் 8 வார வயது அடையும் சமயத்தில் 2 சதுர அடியும் 12 வார வயது அடையும் சமயத்தில் 3 சதுர அடியும் கொடுக்க வேண்டும். புறக்கடைகளில் வளர்க்கும் வான்கோழிகளுக்கு இரவில் தங்குவதற்கு வயதிற்குயேற்றார்போல் 1 முதல் 3 சதுர அடி இடவசதியளிக்கலாம்.
தீவன பராமரிப்பு : இளகுஞ்சுகளை வளர்ப்பதற்கு நல்ல ஊட்டச்சத்துள்ள தீவனம் அளிக்கப்பட வேண்டும். வான்கோழிகள், இறைச்சி கோழி வளர்வதைவிட துரிதமாக வளர்வதால் அவைகளுக்கு குஞ்சுபொறித்த நாளிலிருந்து 3 வார வயது ஆகும் வரை தீவனத்தில் புரதம் 28 சதவிகிதமும், எரிசக்தி 2800 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) அடங்கிய தீவனம் அளிக்கப்படவேண்டும். 4 முதல் 8 வாரங்களுக்கு தீவனத்தில் 26 சதவிகிதம் புரதமும் 2900 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தி இருக்கும் படி தீவனம் அளிக்கவேண்டும்.
வளரும் பருவத்தில் வான்கோழிகளுக்கு புரத்தின் தேவை படிப்படியாக குறைகிறது. அதே சமயத்தில் எரிசக்தியின் தேவை படிப்படியாக அதிகரிக்கிறது. எனவே 8 முதல் 14 வாரங்களில் வளரும் வான்கோழிகளின் தீவனத்தில் 25 சதவிகிதம் புரதமும், 3000 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தியும் இருக்கவேண்டும். முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளின் (14 முதல் 28 வாரம்) தீவனத்தில் 14 சதவிகிதம் புரதமும், 3200 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அளிக்கப்பட வேண்டும். சுமார் 30 வார வயதில் வான்கோழிகள் முட்டையிட ஆராம்பிக்கின்றன.
முட்டையிடும் கோழிகளுக்கு 14 சதவிகிதம் புரதமும் 2900 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளிக்கப்பட வேண்டும். முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கும் முட்டையிடும் கோழிகளுக்கும் கிளிஞ்சல் தூள் 1 சதவிகிதம் சேர்த்து கொடுக்கவேண்டும். வான்கோழிகளின் தீவனத்தில் வைட்டமின் ஏ, பி2, டி3, கே கலவை 100 கிலோவில் சுமார் 50 கிராம் கலக்கப்பட வேண்டும்.
இத்துடன் கால்சியம், பாஸ்பரஸ் கலவை சேர்க்கப்பட வேண்டும். தினமும் பசுங்கீரைகளும், புற்களும் சிறுதுண்டுகளாக அளிக்கப்படவேண்டும். வான்கோழிகளின் தீவனம் அளித்தலில் வான்கோழி எடை, முட்டை உற்பத்தி மற்றும் மொத்த செலவு ஆகியவற்றை மனதில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தீவனம் தயாரித்து அளிக்கவேண்டும்.
கால்நடை வளர்ப்போர்கள் மேற்கூறிய இனவிருத்தி மற்றும் தீவன முறைகளை கையாண்டு வான்கோழி வளர்ப்பில் சிறந்த வருமானம் ஈட்ட வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகலாம்.
தொடர்புக்கு: கால்நடை மருத்தவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625
தொகுப்பு: மரு.மு.வீரசெல்வம், மரு.சோ.யோகேஷ்பிரியா, மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சு.கிருஷ்ணகுமார், மரு.ம.சிவகுமார், மரு.மா.வெங்கடேசன் மற்றும் முனைவர் ப. செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 1 min ago |
ஆப்பிள் பான் கேக்5 days 1 hour ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 3 days ago |
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
-
சென்னையில் நடக்கவிருக்கும் சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. போட்டிக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றன
18 Mar 2024சென்னை : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் தொடங்கியவுடன் விற்று தீர்ந்தன.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : மும்பை அணி புதிய கேப்டன் ஹர்திக் கருத்து
18 Mar 2024மும்பை : ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று மும்பை அணயின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 19-03-2024.
19 Mar 2024 -
சித்திரை திருவிழாவிற்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி துவக்கம்
19 Mar 2024மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி இங்கிலாந்து தூதரகம் அறிக்கை
19 Mar 2024லண்டன், மன்னர் சார்லஸ் இறந்ததா வெளியான செய்தி வதந்தியே என்று இங்கிலாந்து தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகம் புதுவையில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந
-
ஜார்கண்ட் முன்னாள் முதல்வரின் உறவினர் பா.ஜ.க.வில் இணைந்தார்
19 Mar 2024ராஞ்சி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி சீதா சோரன் டெல்லியில் உள்ள பா.ஜ.க.
-
வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது: சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் தி.மு.க அழைப்பு
19 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
-
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி அறிவிப்பு
19 Mar 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.
-
மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப். 6-ம் தேதி வரை நீட்டிப்பு
19 Mar 2024புது டெல்லி, மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பிரேசிலில் சுட்டெரிக்கும் வெப்பம்: கடற்கரைகளில் தஞ்சம் அடையும் பொதுமக்கள்
19 Mar 2024ரியோ டி ஜெனிரோ, பிரேசிலில் கடும் வெப்பம் வாட்டி வதைப்பதால் உஷ்ணத்தை தணிக்க கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
டெல்லியில் அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு
19 Mar 2024புது டெல்லி, மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.
-
தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
19 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
-
ரபா மீது தாக்குதல் நடத்த திட்டம்: நெதன்யாகுவிடம் கவலை தெரிவித்த அதிபர் பைடன்
19 Mar 2024வாஷிங்டன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோபைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.
-
முடிவுக்கு வந்தது நெகட்டிவ் விகிதம்: 17 ஆண்டுகளுக்கு பின் வட்டி விகிதத்தை உயர்த்தி ஜப்பான் மத்திய வங்கி அறிவிப்பு
19 Mar 2024டோக்கியோ, எதிர்மறை வட்டி விகிதங்கள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்