முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. கலசலிங்கம் பல்கலையில் கலை மற்றும் இசைபட்டயம் வழங்கும் விழா!

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் கலை மற்றும் இசைப்பள்ளி சார்பில்  பரதநாட்டியம்,  வீணை,  வயலின்,  மிருதங்கம்  போன்ற இசைப்பயிற்சி வகுப்புகள்  6 மாத பட்டயப்படிப்புகளும்,  ஒரு வருட  டிப்ளமோபடிப்பும்  கடந்தஆண்டு துவக்கப்பட்டு   முதல் பேட்ச்  மாணவர்கள்  11பேர்  பட்டயப்படிப்பிலும் 5 பேர்  டிப்ளமோ படிப்பிலும்  பயிற்சி பெற்று  தேர்வில் வெற்றிபெற்றனர்.
இவர்களுக்கான   சான்றிதழ் மற்றும் பட்டயம்  வழங்கும் விழா  துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர் எஸ்.  சரவணசங்கர்,   பதிவாளர் முனைவர்                 வெ.  வாசுதேவன்  ஆகியோர்  முன்னிலை வகித்து  பட்டங்களை வழங்கினர்.
இசைப்பள்ளித்துறை  தலைவர்  முனைவர் எஸ்.  ராமலிங்கம்,  பயிற்றுநர்கள்  புருஷோத்தமன்  (பரதநாட்டியம்),  கணேஷ் (வயலின்),  கிருஷ்ணபாரதி (வாய்ப்பாட்டு),  சங்கரநாராயணன் (வீணை),  சண்முகநாதன் (மிருதங்கம்) ஆகியோர் பயிற்சிகளையும்,  தேர்வு முறைகளையும், பட்டம்  வழங்கும்  விழாவையும்  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
துறைத்தலைவர்கள,; டீன்,  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து