எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட மாநில அம்மா பேரவைச் செயலாளர்,வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுவோம் என்று மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன் உறுதிபட தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும்,முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கே.தமிழரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாக பிரிந்திருந்த கட்சி தற்போது ஒன்றாக இணைந்துள்ளது. இந்திய வரலாற்றிலே பிரிந்து சென்ற மாபெரும் இயக்கம் மீண்டும் ஒன்றானது அ.தி.மு.க.வை தவிர வேறெதுவும் கிடையாது.காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்து இணையாமல் போய்விட்டது.ஆனால் பிரிந்து மீண்டும் ஒன்றிணைந்த இயக்கம் அ.தி.மு.க மட்டும் தான்.இந்த இணைப்பினால் பொதுமக்களும்,கட்சியினரும் மகிழச்சியடைந்திருந்த நேரத்தில் கழக அம்மா பேரவை செயலாளரான,அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அந்த பொறுப்பிலிருந்து நீக்கி வேறு ஒருவருக்கு அந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்.எங்களை பொறுத்த வகையில் கழக பேரவைச் செயலாளராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அம்மா அவர்கள் நியமித்துள்ளார்கள்.அதன்படி அவருடைய தலைமையில் நாங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.தொடர்ந்து செயல்படுவோம்.மதுரை புறநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரவை நிர்வாகிகள்,பேரவை செயலாளர்கள் அனைவரும் அம்மாவால் நியமிக்கப்பட்ட மாநில அம்மா பேரவைச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சிறப்பாக ஒன்றுபட்டு செயல்படுவோம்.அ.தி.மு.க இணைந்ததை பொதுமக்களும்,கட்சியனரும் மகிழச்சியுடன் வரவேற்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருமங்கலம் பயணியர் விடுதியில் செய்தியாளர்களுக்கு முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் மற்றும் ஒன்றிய அம்மா பேரவை தலைவருமான சாத்தங்குடி.தமிழழகன் பேட்டியளிக்கையில்: மாநில அம்மா பேரவைச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களை கட்சிப்பதவியிலிருந்து நீக்கியதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அம்மாவால் நியமிக்கப்பட்ட கழக அம்மா பேரவைச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நீக்கிட அவருக்கு தகுதி கிடையாது.இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.கட்சியும்,ஆட்சியும் 100ஆண்டுகள் இருக்குமென அம்மா சொல்லியிருக்கிறார்கள். அதனால் அ.தி.மு.க இணைப்பினை பொதுமக்களும்,கட்சியினரும் வரவேற்கின்றனர்.அம்மாவின் சிறப்பான திட்டங்களை முதல்வர் எடப்பாடியாரும்,துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இணைந்து தமிழக மக்களுக்கு தொடர்ந்து செயல்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
அப்போது கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் உச்சப்பட்டி செல்வம்,ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிவன்காளை,முன்னாள் உரப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் மற்றும் அம்h பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


