எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, - மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பாவை நீக்கி டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக வி.வி.ராஜன்செல்லப்பா மறைந்த முதல்வரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். தற்போது மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வி.வி.ராஜன்செல்லப்பா மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான் என்ற செல்வம், நீதிபதி மற்றும் புறநகர் மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா நீக்கப்பட்டதாக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது எனவும் அவர் தொடர்ந்து புறநகர் மாவட்ட செயலாளராக தொடர தங்களது ஒட்டுமொத்த ஆதரவை தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டமுடிவிற்கு பின்னர் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க.என்ற மாபெரும் இயக்கமும் தமிழகத்தில் நடைபெற்று வரும் அம்மாவின் அரசுக்கும் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகளும், மதுரை வடக்கு தொகுதி நிர்வாகிகளும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். கட்சியின் தலைமை நிலைய செயலாளர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சிப்பணியையும், ஆட்சிப்பணியையும் சிறப்பாக செயலாற்றி வருகிறோம். அவருக்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் முழுஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளிவந்தபோது அவரை சந்தித்த எம்.எல்.ஏ.க்களில் நானும் ஒருவன். ஆனால் தற்போது அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தினகரன் நற்குணமும், ஈகை குணமும் படைத்தவர் தான். அம்மாவிடம் உதவியாளராக இருந்தவர். கட்சியைவிட்டு நீக்குவதிலும், மீண்டும் சேர்பதிலும் எனக்கு பலபடிப்பிணைகள் உண்டு. எம்.ஜி.ஆரும், அம்மாவும் என்னை கட்சியிலிருந்து பலமுறை நீக்கிஉள்ளார்கள். அதே போல் கட்சியில் சேர்த்தும் உள்ளார்கள். இப்படிப்பட்ட ஏற்ற தாழ்வுகளை சந்தித்தவன் நான்.
தற்போது டி.டி.வி.தினகரன் என்னை நீக்குவதில் அவசரப்பட்டுவிட்டார், உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட என்னை போன்றவர்களை நீக்க சசிகலா ஒப்புதல் கொடுக்க எந்த வாய்ப்பும் இல்லை. துணைப்பொதுசெயலாளர் அங்கீகாரத்தை அ.தி.மு.க.பொதுக்குழு தினகரனுக்கு இதுவரை கொடுக்க வில்லை. எனவே அவரது அறிவிப்பை பொறுப்படுத்த தேவையில்லை.
கட்சியும், ஆட்சியும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒ.பன்னீர்செல்வம் அணி இணைந்ததை வரவேற்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிரும்,புதிருமாக தேர்தலை சந்தித்தோம். அவற்றையெல்லாம் மறந்து ஆட்சியும், கட்சியும் நிலைக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்து வருகிறோம். இந்த நேரத்தில் என்னை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இதற்கு சசிகலா ஒப்புதல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். எந்த வகையில் அவர் ஒப்புதல் கொடுத்தார் என்பது தெரியவில்லை.
தற்போது டி.டி.வி.தினகரனை ஆதரிக்கிறோம் எனக்கூறும் எம்.எல்.ஏ.க்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி என்று கூறிவிட்டால் ஒட்டுமொத்தமாக உள்ள 19 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் ஓடி வந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளார்கள். இவர்களால் அ.தி.மு.க.ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து அ.தி.மு.க.ஆட்சி தமிழகத்தில் நீடித்து 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.