முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது.

புதன்கிழமை, 6 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,செப்,6: இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரம் பகுதிக்கு வந்த  அரசு பேருந்தில் கொண்டுவரப்பட்ட  20 கிலோ கஞ்சாவை போலீஸார் நேற்று பறிமுதல் செய்து இது தொடர்பாக கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர். ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சாவை கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட உளவுப்பிரிவு போலீஸார்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.அதன் பேரில் போலீஸார்கள் மண்டபம் பகுதியிலிருந்து ராமேசுவரம் பகுதி்க்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதணையிட்டனர்.அப்போது ராமேசுவரம் நோக்கி வந்த அரசு பேருந்தில் துணிப்பை,பேக், சாக்கு முட்டையில் ஆகியவற்றில் கஞ்சா பார்சல் இருந்தது தெரியவந்தது.அதன் பின்னர் போலீஸார்கள் கஞ்சா பார்சலை கைப்பற்றி,இதனுடன் வந்த  உசிலம் பட்டி பகுதியை சேர்ந்த பரமன் மகன் பாண்டி மற்றும் முத்துகாளை மகன் வெள்ளைப்பாண்டி ஆகிய இருவரை கைது செய்தனர்.பின்னர் மண்டபம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து சோதனையிட்டு போலீஸார்கள் விசாரணை  செய்ததில் சாக்கு மூட்டையில் 10 பார்சலில் 20 கிலோ கஞ்சா இருப்பதாகவும்,உசிலம்பட்டி பகுதியிலிருந்து கொண்டு வருவதாகவும்,படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதாகவும் தெரியவந்தது.இதனையடுத்து இவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து