எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ அசைக்கவோ, ஆட்டவோ முடியாது என்று அ.தி.மு.க பொது்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
வெற்றி கிடைத்திருக்கின்றது
அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா ? நடைபெறாது என்றெல்லாம் எதிர்பார்த்தார்கள். ஜெயலலிதாவின் ஆத்மா இந்த பொதுக்குழுக்கூட்டம் நடைபெற வேண்டும் என்று நீதியை நீதிமன்றம் மூலமாக பெற்று, உண்மையான அ.தி.மு.க விசுவாசம் மிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் தான் இந்த பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவார்கள் என்று நீதிமன்றமே நமக்கு நீதி வழங்கியிருக்கிறது. ஆகவே, நீதிமன்றம் மூலமாக நீதி கிடைத்திருக்கிறது. ஆகவே, முதல் வெற்றி நமக்கு இன்று கிடைத்திருக்கின்றது. பிரிந்த இயக்கம் ஒன்றாக இணைந்த வரலாறு இந்தியாவிலேயே ஒரு சில இயக்கங்களுக்குத் தான் பொருந்தும்.
அற்புதமான ஆட்சி
எம்.ஜி.ஆர். மறைந்தபொழுது, ஜெயலலிதா பிரிந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியை 1991-லே அமைத்த பெருமை ஜெயலலிதாவை சாரும். ஆகவே, இந்தக் கட்சிக்கு வரலாறு இருக்கின்றது. எவராக இருந்தாலும், கட்சியை உடைக்கவோ, மாற்றவோ முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அம்மா மறைந்துவிட்டார். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம், ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்றெல்லாம் நினைத்தார்கள். தி.மு.க எவ்வளவோ பிரச்னையை தூண்டியது. அதையெல்லாம் உங்களுடைய ஆதரவினால் அதை தவிடுபொடியாக்கி ஜெயலலிதாவின் கனவை அம்மாவினுடைய அரசு நிறைவேற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே இன்றைக்கு அற்புதமான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
மக்களுக்காக உழைத்தவர்
ஜெயலலிதா பிறக்கின்றபொழுதே செல்வாக்கு மிக்கவராக பிறந்தவர். வாழ்கின்றபொழுது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். இந்த இயக்கத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா , முதலமைச்சராக பொறுப்பேற்று நாள்தோறும் 20 மணிநேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து, எண்ணற்ற திட்டங்களை நாட்டு மக்களுக்கு தந்து, இன்றைக்கு மக்கள் மனதிலே குடிகொண்டிருக்கின்றார் என்று சொன்னால், அவர் போட்ட திட்டம், எந்த ஆட்சியாளர்களாலும் அகற்ற முடியாத திட்டத்தை தமிழகத்திலே போட்டிருக்கின்றார்கள். ஆகவே தான் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுகின்ற கட்சியே, மீண்டும் தமிழகத்திலே வந்திருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே நினைவுகூர கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஆகவே, ஜெயலலிதாவின் அருமை, பெருமைகளை மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இதையெல்லாம் பார்க்கின்றபோது, ஏன் நம் மீது பகைவர்களுக்கு இவ்வளவு கோபம்? கனி இருக்கின்ற மரத்திலே தான் கல்லடி படும் என்று கிராமத்திலே பழமொழி சொல்லுவார்கள். வலிமைமிக்க இயக்கம்அ.தி.மு.க . ஆகவே தான் அத்தனை எதிர்க்கட்சிகளும் நம் மீது பாய்கின்றார்கள். ஆகவே, எதிர்க்கட்சியினர் எவ்வளவு பாய்ந்தாலும் சரி, எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும் சரி, இடர்பாடுகள் கொடுத்தாலும் சரி, உங்கள் துணையோடு அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, உடைத்தெறிந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றியே தீருவோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எவ்வளவோ சிரமங்கள்
தினகரன், யார் இவர் ? 10 ஆண்டு காலம் எங்கே போனார் ? வனவாசம் போயிருந்தார். ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இந்த தினகரன். இன்றைக்கு நம்மைப் பார்த்து கேட்கின்றார். மேடையிலே இருக்கின்றவர்கள் உங்களையும், என்னையும் துரோகி என்று பட்டம் சூட்டுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது ? என்று இந்த நேரத்திலே கேட்க விரும்புகின்றேன். இங்கே வருகை புரிந்திருக்கின்றவர்களும், மேடையிலே அமர்ந்திருக்கின்றவர்களும் இரவு, பகல் பாராமல் இரத்தத்தை மண்ணிலே, சிந்தி, உழைத்ததின் காரணமாக, ஜெயலலிதாவின் செல்வாக்கின் காரணமாக இந்த கட்சியும், ஆட்சியும் உயர்ந்து நிற்கின்றது. இவர்களைப்போல துரோகிகள் யாரும் இல்லை. எவ்வளவோ சிரமத்தை கொடுத்தார்கள். ஜெயலலிதா அதையெல்லாம் தாங்கிக்கொண்டு இந்த கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி சென்றார்கள்.
தொண்டர்களின் உழைப்பு
ஜெயலலிதாவின் விசுவாசி என்று சொல்கின்றார்களே, ஏன் 10 ஆண்டுகாலம் நீக்கி வைத்தார்கள் இவர்களை, எண்ணிப் பாருங்கள். அம்மாவால், இந்தக் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக்கூடாது என்று நீக்கி வைக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் உரிமை கொண்டாடுகின்றார்கள். எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சிந்தியுங்கள். இங்கு வருகை புரிந்திருக்கின்ற அ.தி.மு.க , பொதுக்குழு உறுப்பினர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்கின்றார்கள். ஜெயலலிதா எந்தத் தேர்தலை வந்தாலும், அது கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆனாலும் சரி, உள்ளாட்சித் தேர்லானாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, அம்மா நிறுத்துகின்ற வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது தான் இலட்சியம் என்ற குறிக்கோளோடு இயங்கிக் கொண்டிருக்கின்ற பொதுக்குழு உறுப்பினர்கள் நீங்கள். ஒன்றரை கோடி அ.தி.மு.க தொண்டர்களின் உழைப்பு, அம்மாவிற்கு பெரும் செல்வாக்கை உருவாக்கியிருக்கின்றது. அம்மா செய்த சாதனைக்கு இன்றைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.
எப்படி நீக்கமுடியும் ?
இவர்கள், இன்றைக்கு ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொல்கின்றார்கள். என்ன தகுதி இருக்கின்றது எண்ணிப் பாருங்கள். ஏற்கனவே திட்டமிட்டு இந்த கட்சியை உடைக்க வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். நாள்தோறும் நீக்கல் பட்டியல். இவரே உறுப்பினரில்லை, இவர் எப்படி மற்றவர்களை நீக்கமுடியும். சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் நீ உறுப்பினரா? நீங்களே உறுப்பினராக இல்லாதபோது எப்படி நீங்கள் நீக்க முடியும். இவர் வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்கு உண்மையாக இருக்கின்ற அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் இதைக் கூட்டி தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணி, நீதிமன்றம் சென்றார். நீதிமன்றத்தில் என்ன கிடைத்தது? நீதிதான் வென்றது, என்றைக்கும் நீதி தான் வெல்லும். ஆகவே, இன்றைக்கு நீதி வென்றிருக்கிறது. முதல் கட்டத்திலேயே நமக்கு சாதகமாக இருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக் காட்டி, தினகரன் போல, ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு தொண்டன் மீது கூட இவர்கள் கை வைக்க முடியாது, பிரிந்து செல்லமாட்டார்கள்.
அழிக்கவும் முடியாது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம், அம்மா கட்டிக்காத்த இயக்கம், இருபெரும் தலைவர்களும் உருவாக்கிய இந்த இயக்கத்தை எவராலும் வெல்லவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். ஆகவே, சிலர் கைக்கூலியாக மாறிவிட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்தலைவர் ஸ்டாலின், அவர் எப்பொழுது பார்த்தாலும், மைக் கிடைத்துவிட்டால் போதும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், என்னய்யா உனக்கு துரோகம் செய்தது இந்த ஆட்சி? சொல்வார்களா? ஆகவே, இந்த ஆட்சி, முறைப்படி தேர்தலில் வென்ற ஆட்சி, சட்டமன்றத்திலே நிரூபிக்கப்பட்ட ஆட்சி, ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே, இன்றைக்கு ஆட்சி, அதிகாரம் இரண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.