முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை : பாகிஸ்தான் சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கடற்படை நேற்று ஹெலிகாப்டரில் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது.

பாகிஸ்தான் கடற்படை ஏற்கெனவே தரையில் இருந்து போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்து கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை அரபிக் கடலில் நேற்று நடத்தியது. கடல் சிங்கம் என்று பெயரிடப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை திட்டமிட்டபடி இலக்கை தாக்கி அழித்தது.

இந்த சோதனையை பாகிஸ்தான் கடற்படை தளபதி முகமது நேரில் பார்வையிட்டார். அவர் கூறியபோது, நாட்டின் கடல் எல்லைகளை உயிரைக் கொடுத்து காப்போம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து