முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி கண்டறியப்பட்டதனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் ஆணையாளர் அனீஷ் சேகர் நடவடிக்கை

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 பீ.பீ.குளம், தபால் தந்தி நகர் ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்.  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 பீ.பீ.குளம் வார்டு அலுவலகத்தில் அதிகாலை 6 மணிக்கு பணியாளர்கள் வருகை தந்துள்ளார்களா என வருகைப் பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்து அனைத்து வார்டு அலுவலங்களிலும் காலை 6.15 மணிக்குள் வருகைப் பதிவேட்டினை கையொப்பம் இட்டு முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வார்டு அலுவலகத்தின் சுற்றுப்புறத்தையும், அருகில் உள்ள உழவர் சந்தையின் சுற்றுப்புறத்தையும் ஆய்வு செய்தார். உழவர் சந்தையின் முகப்பில் உள்ள ஆவின் பாலகத்தில் ஆய்வு செய்து குப்பைகள் சாலையில் கிடந்த காரணத்தினால் ஆவின் பாலகத்திற்கு ரூ.2000 அபராதம் விதித்து குப்பை கூடைகள் வைத்து சுத்தமாக பராமரிக்குமாறு கூறினார். மேலும் வார்டு எண்.5 தபால் தந்தி நகரில் டெங்கு பாதிப்பு உள்ள வீட்டில் ஆய்வு செய்து அப்பகுதி முழுவதும் வீடு வீடாக டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து பரப்புதல், அபேட் மருந்து தெளித்தல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்பகுதியில் பயனில்லாமல் புதர்மண்டி பூட்டப்பட்டிருந்த 3 வீடுகளின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குமாறும் இல்லாவிடில் அபராதம் விதிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
 ஒரு வீட்டின் காலியிடத்தில் தேவையற்ற குப்பைகள் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத் ்த காரணத்தினால் ரூ.2000 அபராதம் விதித்து உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அங்குள்ள  ்பதி தேவஸ்தான தகவல் மைய வளாகத்தில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து தபால் தந்தி நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட போது மருத்துவ மனையின் வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் மருத்துவ கழிவுகளை மூடை மூடையாக தேக்கி வைத் ்த காரணத்தினாலும், அங்குள்ள பூத்தொட்டிகளில் டெங்கு கொசு புழு உற்பத்தி இருந்த காரணத்தினாலும்         ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனையில் காய்ச்சல் கண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டதுடன் சிகிச்சை குறித்த அறிக்கையினையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி நகர்நல அலுவலர்  பார்த்திபன், உதவி ஆணையாளர்  அரசு, உதவி செயற்பொறியாளர்  முருகேச பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், சுகாதார அலுவலர்  விஜயகுமார், உதவிப்பொறியாளர்கள்  மணியன்,  சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்  ராஜாமணி குமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து