முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பனையபுரம் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர்.இல.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பல்வேறு நடவடிக்கைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கலெக்டர்.இல.சுப்பிரமணியன் அவர்களின் நேரடிப் பார்வையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.  அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பனையபுரம் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றும் வரும் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பனையபுரம் ஊராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், தேவைற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என கலெக்டர்.இல.சுப்பிரமணியன்  தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து