முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலை விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில்  நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
முன்னதாக, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கட்டுக்குத்தகை கரிசல்குளம் குரூப், க.செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  லெட்சுமணன் என்பவரது மகன்  .பழனிச்சாமி என்பவர் 29.07.17 அன்று மின்விபத்தில் இறந்ததற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் இறந்த நபரான  பழனிச்சாமியின் மனைவி  பாண்டிச்செல்வி என்பவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துக்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார்(நிலம்)  அன்புநாதன்,, உதவி ஆணையர் (கலால்)  சங்கரநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து