Idhayam Matrimony

டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்கள் சார்பில் குழந்தைகள் தின விழா : ஆணையர் விசுவநாதன் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      சென்னை
Image Unavailable

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். (14.11.2017) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயிலும் 11 மாணவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

 வாழ்த்து

மேலும் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் டான்பாஸ்கோ அன்பு இல்ல சமூகபணியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் சென்னை பெருநகர அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் நடுவாங்கரை நாதமுனி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதே போன்று பூக்கடை காவல் மாவட்டத்தில் பூக்கடை, யானைக்கவுனி, வடக்கு கடற்கரை, எஸ்பிளனேடு முத்தியால்பேட்டை ஆகிய காவல் நிலைய எல்லைகளில் உள்ள ஈ.என்.வி சங்கம் ஆரம்பப்பள்ளி, மணிலால் மேத்தா உயர் நிலைப்பள்ளி, டாக்டர் ரத்தினபெல் சுப்பிரமணியம் நர்ஸரி பள்ளி, ஹாஜி எஸ்ஸா அப்பாசையித் பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து போலீசார் குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து