முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக சிறுசேமிப்பு செய்தவர்களுக்கு கலெக்டர் சிவஞானம் கேடயம் வழங்கினார்

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

      விருதுநகர்.-சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் 2016-2017-ஆம் ஆண்டு; மாவட்ட அளவில் மகளிர் முகவர்கள் மற்றும் நிலை முகவர்களில் அதிகமாக சிறுசேமிப்பு வசூல் செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 நிலை முகவரில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற திரு.கே.முத்துச்சேரன் என்பவருக்கும், மகளிர் முகவரில்  மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற திருமதி.வ.கிருத்திகா என்பவருக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ரூ.3000ஃ-க்கான, சேமிப்பு பத்திரமும், கேடயமும் வழங்கப்பட்டது, மற்றும் ஒன்றிய, நகராட்சி அளவிலான முதலிடம் பெற்ற மகளிர் முகவர்களுக்கு ரூ.1000ஃ-க்கான சேமிப்பு பத்திரங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:
‘இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு” என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட ஒவ்வொரு குடிமக்களும் சேமிப்பின் பழக்கத்தினை அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டும்.  அவ்வாறு  சிறுக சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும்.  மக்கள் தங்கள் கடின உழைப்பால்  ஈட்டிய செல்வத்தை தங்களது குடும்பத்திற்கு பயன்படும் வகையில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழக்கைக்கு  பாதுகாப்பும் கிடைத்திடும்.  ‘சிறுகக்கட்டி பெருக வாழ்” என்பதனை உணர்ந்து விருதுநகர் மாவட்ட மக்கள்அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்பு கணக்கினை துவக்கிட வேண்டும், விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறுசேமிப்பு திட்ட முகவர்கள் மூலமாக பொதுமக்களிடையே சேமிக்கும் பழக்கத்தினை எடுத்துரைத்து அவர்கள் மூலமாக அஞ்சலகங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.  அதில் 464 மகளிர் முகவர் மூலமாக   1001.08  லட்சங்களும்  47 நிலை முகவர் மூலமாக 4038.75 லட்சங்களும்  முதலீடு செய்யப்பட்டுள்ளது.    என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சி.சே)திருமதி இரா.லீலா, விருதுநகர் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர்திரு.டி.எம்.கண்ணன்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜா ஆகியோர் உடன் உள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து