முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மற்றும் மறுவாழ்வு முகாம் : மா.சந்திரகாசி எம்பி, ஆர்.டி.ராமசந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      பெரம்பலூர்
Image Unavailable

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் நேற்று (21.11.2017) முதல் 25.11.2017 வரை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து 14 துறைகள் ஒருங்கிணைப்புடன் சிறப்பு முகாமகள்; நடத்தப்படுகின்றது.

 பெங்களுரில் உள்ள அலிம்கோ என்ற மத்திய அரசு நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை செய்து வருகின்றது. பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியால் மத்திய அரசின் நிறுவனமான அலிம்கோ நிறுவனத்தின் நிபுணர்களும் இம்முகாம்களில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்குத்தேவையான உபகரணங்களை செய்துகொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மறுவாழ்வு முகாம் அதனடிப்படையில் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மற்றும் மறுவாழ்வு முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

 இச்சிறப்பு முகாம்களுக்கு அலிம்கோ நிறுவனத்தின் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிபுணர், செவித்திறன் கண்டறியும் நிபுணர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வருகைதந்து மாற்றுத்திறனாளிகளை பார்வையிட்டு அவர்களுக்குத்தேவையான உபகரணங்கள் குறித்தும், அவற்றின் அளவுகள் குறித்தும் தகவல்கள் சேகரித்தனர். முகாமில் 18 வகையான உபகரணங்கள் வேண்டி 102 நபர்களும், கடன் உதவித்தொகை வேண்டி 78 நபர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு வேண்டி 11 நபர்களும், தமிழக முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர 20 நபர்களும், ஆதார் அட்டை வேண்டி 14 நபர்களும், முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை வேண்டி 4 நபர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை வேண்டி 56 நபர்களும் என மொத்தம் 285 நபர்கள்; கலந்துகொண்டு, விண்ணப்பங்களை அளித்தனர்.

 இம்முகாமில் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செல்வராஜன் அவர்களாலும், கை,கால் தொடர்பான பிரச்சனைகளுக்கு எலும்பியல் மருத்துவர் மரு.விவேக் அவர்களாலும், கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு மரு.ஆனந்தமூர்த்தி அவர்களாலும், காது,மூக்கு தொடர்பான பிரச்சனைகளுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மரு.தேவேந்திரன் அவர்களாலும், குழந்தைகள் நல தொடர்பான பிரச்சனைகளுக்கு குழந்தைகள் நல அலுவலர் மரு.கமலக்கன்னன் அவர்களாலும் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் உபகரணங்கள் தேவைப்படும் நபர்களுக்கு உரிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை 22.11.2017 வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23.11.2017 அன்று பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 25.11.2017 அன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ மற்றும் மறுவாழ்வு முகாம்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செல்வராஜன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சம்பத், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், குன்னம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மனோண்மணி, வேப்பூர் வட்டார வளர்;ச்சி அலுவலர் செந்தில் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து