எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கதேர் உலா வரக்கூடிய கிரி பிரகாரம் மண்டபத்தில் 50 அடி நீளத்திற்கு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளிடையே சிக்கிய மோர் விற்கும் பெண் நசிங்கி பலியானார். திருப்பூர் பக்தர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கோயில் நடை உடனடியாக சாத்தப்பட்டது
சம்பவ இடத்தை பார்வையிட்ட கலெக்டர் வெங்கடேஷ், கிரி பிரகாரம் மற்றும் கட்டிடங்களை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை இன்ஜினியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே பலியானவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண கேட்டு அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயில் கடலருகே அமைந்து சிறப்பு வாய்ந்தது. இயற்கை எழிலுடன் கோயில் கிரிபிரகாரத்துடன் பார்ப்பதற்கே ஆச்சரியமூட்டும் வகையில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க தேரில் உலா வரக்கூடிய கிரி பிரகாரம் மண்டபம் தூண்களால் தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரி பிரகாரத்தின் வள்ளி குகை எதிர்புறம் வடக்கு பிரகாரம், தெற்கு பிரகாரம் திரும்பும் இடத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை சுமார் 50 அடி நீளத்திற்கு நேற்றுகாலை 10.30 மணியளவில் திடீரென எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இடிந்த விழுந்த இடத்தில் மேற்கூரை கனமான கட்டிடங்களாக இருந்ததால் உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இரண்டு ஜே.சி.பி. மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது இடிபாடுகளிடையே சிக்கி திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி பேச்சியம்மாள்(44) நசிங்கி இறந்தது தெரியவந்தது. இவர் இந்த பகுதியில் உட்கார்ந்து மோர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் சம்பவ இடத்தில் கட்டிடம் விழுந்த போது காயமடைந்த திருச்செந்தூர் சுப்பிரமணியரபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில் ஆறுமுகம்(64), சுவாமி தரிசனத்திற்காக வந்த திருப்பூர் பெருமாள்நல்லூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் கந்தசாமி(74) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் செந்தில்ஆறுமுகம் சம்பவ இடத்தில் சுக்கு காபி வியாபாரத்தில் ஈடுப்பட்டு வந்தார். கந்தசாமி முன்னாள் வி.ஏ.ஒ.,வாக பணியாற்றியவவர். மேலும் சம்பவ இடத்தில் இடிந்த கட்டிடங்கள் உடனடியாக சுமார் ஒரு ஒன்றரை மணி நேரத்தில் அகற்றப்பட்டன. மேலும் சம்பவ இடத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த உடனே கோயில் நடைசாத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன், திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., கணேஷ்குமார், தாசில்தார் அழகர், போலீஸ் டி.எஸ்.பி. பாலசந்திரன்(பொறுப்பு), கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஜராணி, தாலுகா இன்ஸ்பெக்டர் ரகுராஜன், கோயில் உதவி ஆணையர் ராமசாமி, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன், உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மனோரஞ்சிதம் ஆகியோர் விரைந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர். இடிபாடுகளில் சிக்கி இறந்த பேச்சியம்மாளுக்கு சுமதி(14) மகளும், சுரேஷ்(12) மகனும் உள்ளனர். இவர்கள் 9ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்கின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் கலெக்டர் வெங்கடேஷ் கூறியதாவது:
திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் வடக்குவாசல் அருகே மேற்கூரை சுமார் 20 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்தது. இதில் பேச்சிம்மாள் இடிபாடுகளிடையே சிக்கி இறந்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில் ஆறுமுகம்(64), திருப்பூரைச் சேர்ந்த பக்தர் கந்தசாமி(74) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோயில் பகுதியில் உள்ள 40 முதல் 45 ஆண்டுகள் வரையிலான பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித்துறையினர் சூப்பிரெண்டென்ட் இன்ஜினியர் தலைமையில், வருவாய் துறை, போலீஸ், அறநிலையத்துறை, டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் 5 பேர் அடங்கிய குழுவினர் கட்டிடங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இவர்கள் உடனடியாக ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இறந்த போன பேச்சியம்மாளின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கலெக்டரோ, அறநிலையதுறை அதிகாரிகளோ நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. பாதிக்கப்பட்ட பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். மறியல் நடத்தியவர்களிடம் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ. கணேஷ்குமார், தாசில்தார் அழகர், டி.எஸ்.பி.பாலசந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் 12.45 மணி முதல் 1.15 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அரசு தெரிவித்து நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் குவிந்தனர்.
கிரிபிரகாரம் வரலாறு
மேற்கூரை இடிந்த விழுந்த கிரி பிரகாரம் 1760 அடி நீளம் கொண்டது. கடந்த 1971ம் ஆண்டு சாண்டோ சின்னப்ப தேவர் உபயமாக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணி துவங்கியது. இப்பணி 1974ல் நிறைவடைந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த கிரி பிரகாரம் கடந்த 2009ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. அப்போது மேற்கூரையி சேதமடைந்த பகுதிகளை மட்டுமே சீரமைக்கப்பட்டது. கிரி பிரகாரத்தின் பலம், தன்மை குறித்து இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.