எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பிரதான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை புதிய பொலிவுடன் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும் என தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழக விளம்பரம் மற்றும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் நேற்று வந்தார். அவரை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்கு சென்று அவர் பயபக்திடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இணை ஆணையர் பாரதி ஆகியோர் கோயில் பகுதியில் கிரி பிரகாரம் மண்டபம் இடித்த பகுதிகள், தொடர்ந்து கோயில் கலையரங்கம் பகுதியில் அகற்றப்பட்ட கடைகள், மேலும் வியாபாரிகளுக்கு புதிய கடைகள் கட்டப்படுவதற்காக அனுகிரக மண்டபம், ஜெயந்திநாதர் விடுதி வளாகம், நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தன. பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:2018ம் ஆண்டு புத்தாண்டில் தமிழக மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக கோயிலில் பிரார்த்தனை செய்தோம். இக்கோயிலில் கோயில் கிரி பிரகாரம் மண்டபம் இடிவதற்கு முன்பே அதனை இடிக்க வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் கோயில் நிர்வாகம் தீர்மானமாக போட்டு அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் உடனடியா பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் அதற்குள்ளாகவே எதிர்பாராமல் அசம்பாவிதம் நடந்து விட்டது. உடனடியாக தமிழக முதல்வர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அமைச்சரை அனுப்பி அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த பெண்ணிற்கு ரூ.5 லட்சம் வழங்கி, அவர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் படித்து முடிந்த பிறகு அறநிலையத்துறையில் பணி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் நடவடிக்கையாக கட்டிடங்களில் தன்மைகளை, ஆராய்ந்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அப்படி இடிக்கும் போது, வியாபாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அப்படி அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் கடைகளை மாற்றி தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் நானும், அறநிலையதத்துறை இணை ஆணையர், தக்கார், மாவட்ட செலாளர் ஆகியோர் வியாபாரிகள் கூறி இடங்களில் நேரில் பார்த்து ஆய்வு செய்தோம். பல இடங்களை பார்த்துள்ளோம். ஜெயந்திநாதர் விடுதி வளாகத்தில் 21 கடைகளும், மேலும் அனுக்கிர மண்டபம், நாழிகிணறு பக்கத்தில் நிரந்தரமாக பஸ் ஸ்டாண்டாக செயல்பட துவங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியிலும் தேவஸ்தான கேண்டின் பகுதியிலும், அனுகிரக மண்டபத்திலும், நாழிகிணற்றிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதைகளை நாங்கள் மட்டுமல்ல, வியாபாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். கோயில் கிரி பிரகார மண்டபத்தை கட்டுவதற்கு உபயதாரர் தயாராக இருக்கின்றனர். கல் மண்டபமாக தான் கட்டப்பட வேண்டும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாராகவில்லை. விரைவில் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் வந்து திட்ட மதிப்பீடு தயார் அரசு, கோயில் நிர்வாகமும் செய்யும். இந்தியாவில் முக்கியமான கும்பகோணம் மகாமகத்தை சிறப்பாக நடத்தியதற்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதே போது இந்தியாவில் பஞ்சாப் பொற்கோயில் எல்லாம் உள்ள போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பழமை மாறாமல் பாதுகாப்பதற்காக மத்திய அரசு சிறப்பு விருது வழங்கியுள்ள கௌரவித்துள்ளது. அதே போல் திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா, திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா ஆகியவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.
தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் 6 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடத்தியுள்ளோம். அதே போல அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்தியுள்ளோம். இந்தியாவில் தமிழகம் தான் முன்னோடி துறையாக அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய பொலிவுடன் கோயிலை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக விரைவில் அதிகாரிகள் வர உள்ளனர். தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணிக்கு கோயிலுக்கு அடுத்தப்படியாக அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் கோயில் உள்ளது. பிரதான கோயிலான இக்கோயிலில் நிரந்த திட்டங்கள் நடக்க உள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் பேசுகையில், டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். இது என்னுடைய துறையில் வருகிறது. இதனால் மணி மண்டபம் கட்டுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்குரிய இடத்தை வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசி ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் செல்லப்பாண்டியன், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்பாபு, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்
12 Jul 2025சென்னை : தனியார் பால் நிறுவனத்தில் கருவூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
-
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: இ.பி.எஸ். உறுதி
12 Jul 2025சென்னை : ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
-
10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
12 Jul 2025சென்னை, காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் கூறி உள்ளார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.