எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிரதான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை புதிய பொலிவுடன் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும் என தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழக விளம்பரம் மற்றும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் நேற்று வந்தார். அவரை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்கு சென்று அவர் பயபக்திடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இணை ஆணையர் பாரதி ஆகியோர் கோயில் பகுதியில் கிரி பிரகாரம் மண்டபம் இடித்த பகுதிகள், தொடர்ந்து கோயில் கலையரங்கம் பகுதியில் அகற்றப்பட்ட கடைகள், மேலும் வியாபாரிகளுக்கு புதிய கடைகள் கட்டப்படுவதற்காக அனுகிரக மண்டபம், ஜெயந்திநாதர் விடுதி வளாகம், நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தன. பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:2018ம் ஆண்டு புத்தாண்டில் தமிழக மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக கோயிலில் பிரார்த்தனை செய்தோம். இக்கோயிலில் கோயில் கிரி பிரகாரம் மண்டபம் இடிவதற்கு முன்பே அதனை இடிக்க வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் கோயில் நிர்வாகம் தீர்மானமாக போட்டு அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் உடனடியா பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் அதற்குள்ளாகவே எதிர்பாராமல் அசம்பாவிதம் நடந்து விட்டது. உடனடியாக தமிழக முதல்வர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அமைச்சரை அனுப்பி அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த பெண்ணிற்கு ரூ.5 லட்சம் வழங்கி, அவர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் படித்து முடிந்த பிறகு அறநிலையத்துறையில் பணி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் நடவடிக்கையாக கட்டிடங்களில் தன்மைகளை, ஆராய்ந்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அப்படி இடிக்கும் போது, வியாபாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அப்படி அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் கடைகளை மாற்றி தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் நானும், அறநிலையதத்துறை இணை ஆணையர், தக்கார், மாவட்ட செலாளர் ஆகியோர் வியாபாரிகள் கூறி இடங்களில் நேரில் பார்த்து ஆய்வு செய்தோம். பல இடங்களை பார்த்துள்ளோம். ஜெயந்திநாதர் விடுதி வளாகத்தில் 21 கடைகளும், மேலும் அனுக்கிர மண்டபம், நாழிகிணறு பக்கத்தில் நிரந்தரமாக பஸ் ஸ்டாண்டாக செயல்பட துவங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியிலும் தேவஸ்தான கேண்டின் பகுதியிலும், அனுகிரக மண்டபத்திலும், நாழிகிணற்றிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதைகளை நாங்கள் மட்டுமல்ல, வியாபாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். கோயில் கிரி பிரகார மண்டபத்தை கட்டுவதற்கு உபயதாரர் தயாராக இருக்கின்றனர். கல் மண்டபமாக தான் கட்டப்பட வேண்டும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாராகவில்லை. விரைவில் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் வந்து திட்ட மதிப்பீடு தயார் அரசு, கோயில் நிர்வாகமும் செய்யும். இந்தியாவில் முக்கியமான கும்பகோணம் மகாமகத்தை சிறப்பாக நடத்தியதற்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதே போது இந்தியாவில் பஞ்சாப் பொற்கோயில் எல்லாம் உள்ள போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பழமை மாறாமல் பாதுகாப்பதற்காக மத்திய அரசு சிறப்பு விருது வழங்கியுள்ள கௌரவித்துள்ளது. அதே போல் திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா, திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா ஆகியவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.
தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் 6 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடத்தியுள்ளோம். அதே போல அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்தியுள்ளோம். இந்தியாவில் தமிழகம் தான் முன்னோடி துறையாக அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய பொலிவுடன் கோயிலை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக விரைவில் அதிகாரிகள் வர உள்ளனர். தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணிக்கு கோயிலுக்கு அடுத்தப்படியாக அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் கோயில் உள்ளது. பிரதான கோயிலான இக்கோயிலில் நிரந்த திட்டங்கள் நடக்க உள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் பேசுகையில், டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். இது என்னுடைய துறையில் வருகிறது. இதனால் மணி மண்டபம் கட்டுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்குரிய இடத்தை வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசி ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் செல்லப்பாண்டியன், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்பாபு, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.