எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி, பரமத்தி சாலை, அண்ணா நகர் காலனி பி.எஸ்.ஏ பெட்ரோல் பங்க் எதிரில் நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்ட பணியின் தொடக்க விழா நேற்று (21.01.2018) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமைவகித்தார். இவ்விழாவிற்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்ட பணியினை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
குடிநீர் திட்டம்
நாமக்கல் நகராட்சி, நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்நகராட்சியானது 64.24 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. நாமக்கல் நகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள சின்ன முதலைப்பட்டி, முதலைப்பட்டி, கொசவம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, காவெட்டிப்பட்டி, நல்லிப்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் தும்மங்குறிச்சி ஆகிய 9 ஊராட்சிகள் நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு 39 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நகராட்சியில் உள்ள மக்களுக்கு ஏற்கனவே மோகனூர் காவிரி ஆற்று பகுதியில் இருந்து 3 தனித்தனி திட்டங்களின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கிடுவதற்காக தற்போது ஜேடர்பாளையம் காவிரி ஆற்று அணைக்கட்டு பகுதியில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கபிலர் குறிச்சியில் 17.66 எம்.எல்.டி சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதிலிருந்து நீர் உந்து குழாய்கள் மூலம் சுமார் 24.60 கி.மீ தூரத்தில் உள்ள தும்மங்குறிச்சியில் 9.15 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைத்து அதிலிருந்து சுமார் 31.30 கி.மீ நீர் உந்து குழாய்கள் மூலம் நாமக்கல் நகராட்சியில் புதியதாக 9 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைத்து, புதிதாக நீர் பகீர்மான குழாய்கள் பதித்து குடிநீர் இணைப்புகள் அமைத்து குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவு பெற்றவுடன் நாமக்கல் நகராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு சுமார் 135 லிட்டர் காவிரி குடிநீர் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் நகராட்சி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேற்றப்படும்.
துவக்கி வைத்தனர்
நாமக்கல் நகராட்சிக்கு ஜேடர் பாளையம், காவிரி ஆற்றிலிருந்து ரூ.185.24 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணியினை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் பூமி பூஜையிட்டு பணியினை தொடங்கி வைத்தார்கள்.
கபிலக்குறிச்சியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 8 ஏக்கர் நிலம் தானமாக வழங்கிய கிரீன் பார்க் பள்ளியின் தாளாளர் சரவணன் மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அசோகன் ஆகியோருக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, நாமக்கல் சார் கலெக்டர் சு.கிராந்தி குமார் பதி , நாமக்கல் நகராட்சி ஆணையாளர் கு.பாலசுப்பிரமணியம், நகராட்சி பொறியாளர் என்.கமலநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் செல்வதுரை, நிர்வாக பொறியாளர்கள்; என்.ஆர்.தங்கவேல், கண்ணன், மணிவண்ணன், உதவி நிர்வாக பொறியாளர் சி.மதியழகன், நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் க.பாலகிருஷ்ணன், சேலம்-நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, அரசு வழக்கறிஞர்கள் தனசேகர், சந்திரசேகர், நாமக்கல் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேகர் உட்பட முன்னாள் நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.