எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி, பரமத்தி சாலை, அண்ணா நகர் காலனி பி.எஸ்.ஏ பெட்ரோல் பங்க் எதிரில் நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்ட பணியின் தொடக்க விழா நேற்று (21.01.2018) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமைவகித்தார். இவ்விழாவிற்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்ட பணியினை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
குடிநீர் திட்டம்
நாமக்கல் நகராட்சி, நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்நகராட்சியானது 64.24 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. நாமக்கல் நகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள சின்ன முதலைப்பட்டி, முதலைப்பட்டி, கொசவம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, காவெட்டிப்பட்டி, நல்லிப்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் தும்மங்குறிச்சி ஆகிய 9 ஊராட்சிகள் நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு 39 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நகராட்சியில் உள்ள மக்களுக்கு ஏற்கனவே மோகனூர் காவிரி ஆற்று பகுதியில் இருந்து 3 தனித்தனி திட்டங்களின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கிடுவதற்காக தற்போது ஜேடர்பாளையம் காவிரி ஆற்று அணைக்கட்டு பகுதியில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கபிலர் குறிச்சியில் 17.66 எம்.எல்.டி சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதிலிருந்து நீர் உந்து குழாய்கள் மூலம் சுமார் 24.60 கி.மீ தூரத்தில் உள்ள தும்மங்குறிச்சியில் 9.15 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைத்து அதிலிருந்து சுமார் 31.30 கி.மீ நீர் உந்து குழாய்கள் மூலம் நாமக்கல் நகராட்சியில் புதியதாக 9 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைத்து, புதிதாக நீர் பகீர்மான குழாய்கள் பதித்து குடிநீர் இணைப்புகள் அமைத்து குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவு பெற்றவுடன் நாமக்கல் நகராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு சுமார் 135 லிட்டர் காவிரி குடிநீர் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் நகராட்சி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேற்றப்படும்.
துவக்கி வைத்தனர்
நாமக்கல் நகராட்சிக்கு ஜேடர் பாளையம், காவிரி ஆற்றிலிருந்து ரூ.185.24 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணியினை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் பூமி பூஜையிட்டு பணியினை தொடங்கி வைத்தார்கள்.
கபிலக்குறிச்சியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 8 ஏக்கர் நிலம் தானமாக வழங்கிய கிரீன் பார்க் பள்ளியின் தாளாளர் சரவணன் மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அசோகன் ஆகியோருக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, நாமக்கல் சார் கலெக்டர் சு.கிராந்தி குமார் பதி , நாமக்கல் நகராட்சி ஆணையாளர் கு.பாலசுப்பிரமணியம், நகராட்சி பொறியாளர் என்.கமலநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் செல்வதுரை, நிர்வாக பொறியாளர்கள்; என்.ஆர்.தங்கவேல், கண்ணன், மணிவண்ணன், உதவி நிர்வாக பொறியாளர் சி.மதியழகன், நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் க.பாலகிருஷ்ணன், சேலம்-நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, அரசு வழக்கறிஞர்கள் தனசேகர், சந்திரசேகர், நாமக்கல் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேகர் உட்பட முன்னாள் நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          63-வது குருபூஜை - 118-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை30 Oct 2025மதுரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு 
-   
          வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி. 
-   
          தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா 
-   
          பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது. 
-   
          கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது. 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை30 Oct 2025மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
-   
          ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2025.30 Oct 2025
-   
          சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
-   
          டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. 
-   
          பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி30 Oct 2025மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
-   
          சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். 
-   
          தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு30 Oct 2025சென்னை, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய 
-   
          தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார். 
-   
          தங்கம் விலை உயர்வு30 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது. 
-   
          வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார். 
-   
          திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்30 Oct 2025திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. 
-   
          பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை30 Oct 2025சென்னை, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
-   
          பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்30 Oct 2025மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். 
-   
          நெல் கொள்முதல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு30 Oct 2025மதுரை, நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அ.தி.மு.க. 
-   
          33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!30 Oct 2025நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
-   
          பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரம்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்30 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ஏள புதிய முடிவால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை 






















































