எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி, கல்வித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான தமிழக பள்ளி கலைத் திருவிழா (கலையருவி) விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு, கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 584 மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களையும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 84 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களையும் வழங்கினார்.விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது-
தமிழக பள்ளி கலைத் திருவிழா
தமிழக மாணவ செல்வங்களை புரட்சித்தலைவி அம்மா தன் பிள்ளைகளை போல பாவித்து, மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும். கல்வியை பாதியில் நிறுத்தக் கூடாது. உலகளவில் நமது மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 14 வகையான உதவிகளை மாணவ, மாணவிகளுக்கென செயல்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து நமது முதல்வர் , துணை முதல்வர் , பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களை கல்வியில் சிறந்தவர்களாகவும், மதிப்புமிக்கவர்களாகவும் மாற்றிட ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அத்துடன் அவர்களின் கலை திறனையும் வளர்க்க முடியும் என்பதை இங்கு நடந்த கலை நிகழ்ச்சிகள் மூலம் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு மாணவரின் திறமைகளையும் ஆசிரியர்கள் வெளிகொணர்ந்து நிறைய போட்டிகளில் பங்கேற்று அதிக பரிசுகளை பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிகளில் பங்கேற்ற அனைவரும் இதை வெற்றியின் முதல் படியாக மனதில் நிறுத்தி, அடுத்து வரும் ஆண்டுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும். இளைஞர்களை செல்போன், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட கவனத்தினை சிதைக்கும் பல விஷயங்களில் இருந்து அவர்களை இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதன் மூலம் ஊக்கப்படுத்தலாம். இதை நிருபிக்கும் வகையில் இங்கு சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை செய்த மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாளைய உலகை ஆளும் அடுத்த தலைமுறை ஆகிய நீங்கள் சிறப்பாக கல்வி பயில்வதுடன், கலைகளிலும் திறமையினை வளர்த்து தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு பெருமை ஏற்படுத்திட வேண்டும். நமது மாவட்ட மாணவ, மாணவிகள் அதிகளவில் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பரிசு பெற்று, நமது மாவட்டம் தமிழகத்தில் முதல் மாவட்டமாக திகழ்ந்திட வேண்டுமென பேசினார்.இவ்விழாவில், கலெக்டர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது-
தமிழக அரசு நமது கலாச்சாரம் மற்றும் தொன்மையான கலைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைப் போட்டிகளை பள்ளி அளவில் நடத்தி வருகிறது. 2017-18ம் கல்வி ஆண்டில் நமது மாவட்டத்தில் கலைப் போட்டிகள் நடுநிலைப்பள்ளி அளவில் 25 பிரிவிலான போட்டிகளும், உயர்நிலைப் பள்ளி அளவில் 103 போட்டிகளும், மேல்நிலைப்பள்ளி அளவில் 103 போட்டிகளும் என மொத்தம் 231 வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு, 584 மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. நுண்கலை, இசை, கருவி இசை, நடனம், நாடகம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. நமது கலாச்சாரத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நீங்கள் அதற்கான பயிற்சிகளை பெற்றுள்ளீர்கள். இங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு திறன்மிக்க கலைஞர்களை போல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளீர்கள். இது மிகவும் பெருமைக்குரியதாகும். மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள நீங்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென பேசினார்.முன்னதாக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த 84 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ரூ.4.32 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.முருகானந்தம், டான்பெட் துணைத் தலைவர் கண்ணன்(எ) ராஜூ, ஆவின் சேர்மன் ரமேஷ், அக்ரோ சேர்மன் மகபூப்ஜான், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், முக்கிய பிரமுகர்கள் சுதா கே.பரமசிவம், பரணி சங்கரலிங்கம், ஜெரால்டு, தச்சை மாதவன், கபேரியல் ராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (திருநெல்வேலி) இரா.ஜெயபாண்டி, (தென்காசி) சி.ரதிபாய், திருநெல்வேலி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பொ.சந்திரசேகரன், திருநெல்வேலி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ப.நடராஜன், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் சி. சேது சொக்கலிங்கம், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் த.தனசிங் ஐசக் மோசஸ், சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி த.ஞானஜோதி, பள்ளி தலைமையாசிரியை ந.நூர்ஜிபாய்எபனேசர் உள்பட அலுவலர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
எந்த காலக்கெடுவுக்கும் இந்தியா அஞ்சாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
05 Jul 2025புதுடெல்லி, எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு
05 Jul 2025பியூனோஸ் அயர்ஸ், பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.