எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டியில் உள்ள விசுவகர்ம பள்ளி முன்பு அமைக்கபட்ட திருவள்ளுவர் திடலில் ஏழை பேராசிரியர், தமிழ் உணர்வு உள்ள மண்ணின் மைந்தர் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களின் தொடர்முயற்ச்சியால் உருவாக்கபட்ட திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா அவரின் தமிழ் இலக்கிய வாரிசுகள், மாணக்கர்களால் விடாமுயற்ச்சியின் பொருட்டு கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா
பலவேறு தமிழ்இன விரோதிகளால் ஏற்படுத்தபட்ட தடைகளையும் மீறி நடந்த விழாவுக்கு தலைவர் கருத்தபாண்டி தலைமை வகித்தார். துணைதலைவர் திருமலை முத்துசாமி, செயலாளர் நம்.சீனிவாசன், இணைசெயலாளர் சான்கணேசு, பொருளாளர் முத்துராசு, தணிக்கையாணர் அந்தோணிராசு, வழக்கறிஞர் பரமசிவம், நெறிபடுத்துனர்கள் இலக்குமணபெருமாள், பரமசிவம், விநாயகாரமேசு, ஆகியோர்களின் கடும் முயற்ச்சியால் நடந்த நிகழ்வில் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தலைமை ஏற்று பேசுகையில் தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் பேரறிஞர் உலக தமிழ் மாநாட்டினை நடத்தினர், அவரை வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர், சங்கம் வளர்த்த மதுரையில் 1981ல் 5வது உலக தமிழ் மாநாட்டை நடத்தி , தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் நிறுவி பெருமை சேர்த்தார். அதே வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தஞ்சையில் உலக தமிழ்மாநாட்டினை நடத்தி, நான்காம் தமிழாம் அறிவியல் தமிழை அறிமுகப்படுத்தினர். அந்த வழியில் தான் நாங்களும் தமிழ் உணர்வோடு வந்த காரணத்தினால், பெயரளவில் தமிழ் உச்சரிப்பது மட்டுமல்லமால், அம்மாவின் அரசினை நடத்தி கொண்டு இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஹார்டுபல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்பதற்காக 10கோடி ரூபாய் வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளது அம்மாவின் அரசு என்பதனை பெருமையுடன் கோடிட்டு காண்பிக்க விரும்புகிறேன். அதன் பிறகு தான் தமிழ் அறிஞர்கள், தமி@ழ் ஆர்வலர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். ஒரு மனிதன் தனது வாழ்க்கை நெறியை செம்மைபடுத்தி கொள்ள தெய்வபுலவர் திருவள்ளுவரின் திருக்குறளை பின்பற்றினால் போதும் என்று எடுத்துரைத்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் தமிழ் பரவ வேண்டும், திருக்குறளின் பெருமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க ரூ. 5கோடி ரூபயாய் ஒதுக்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டது மட்டுமின்றி அதனை செயல்படுத்தி பெருமையை சேர்த்தார். அது மட்டுமல்லாது பாரதிய ஜனதாகட்சியை சேர்ந்த எம்.பி. தருண் விஜய், திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமாரியில் இருந்து கொண்டு சென்ற போது, சென்னையி@ல் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்களையும் பங்கேற்க வைத்தது மட்டுமின்றி, அந்த சிலையை பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கும் பணியும் ஜெயலலிதா செய்ய உத்தரவுபிறப்பித்து செயல்படுத்தி காட்டினார். தமிழுக்கு பெருமை சேர்ந்த திருவள்ளுவரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதே பணியை கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற சிறப்பாக செய்து வருகிறது. இதன் 50வது பொன்விழா ஆண்டில் உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை கோவில்பட்டி வரழைத்து, மிகப்பெரிய அளிவில் நடத்திட என்னால் முடிந்த உதவிகளை,நான் எந்த நிலையில் இருந்தாலும் உறுதியாக செய்வேன் மேலும் தமிழுக்கு பெருமைசேர்த்த எனது ஏழை பேராசிரிய பெருந்தகை ஐயா அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களுக்கும், தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் அதிமுக அரசு என்றும் பெருமை சேர்க்கும் என்றார். இதனை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச்செல்வன் வள்ளுவம் என்ற வாழ்வியல் அறம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதையெடுத்து வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல்காதர் தலைமையில் சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லெட்சுமணப்பெருமாள், தொழில் அதிபர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு, இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்புவித்தலில் அசத்திய மாணவிகள்: திருவள்ளுவர் மன்ற 46ஆம் ஆண்டு நிறைவு விழாவின் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரையடுத்த ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வரும் 8ஆம் வகுப்பு மாணவி ரா.பிருந்தாலட்சுமி மற்றும் அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி ர.நாகஜோதி ஆகிய இருவரும் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்தனர்.மேலும், விழாவில் பங்கேற்ற ஆர்வலர்கள் திருக்குறள் அதிகாரத்தின் தலைப்பை குறிப்பிட்டு கேட்டாலும், திருக்குறளின் வரிசை எண்ணை குறிப்பிட்டு கேட்டாலும் மாணவிகள் அந்த திருக்குறளை அடிபிறழாமல் ஒப்புவித்தது விழாவில் பங்கேற்ற அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, திருக்குறளை ஒப்புவித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-01-2026
04 Jan 2026 -
மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
04 Jan 2026சென்னை, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல் என்று பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
-
பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையையையொட்டி 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்ம
-
10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்
04 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இன்று (ஜன.
-
விபி ஜி ராம்ஜி புதிய சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
04 Jan 2026ஐதராபாத், விபி ஜி ராம்ஜி-க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
கேரளா: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பலி
04 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்தில் ஒருவர் பலியானார்.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
04 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் நியமனம்
04 Jan 2026கராகஸ், வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க சிறையில் அடைப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப
-
மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தானில் 4 காவலர்கள் பலி
04 Jan 2026லாகூர், பாகிஸ்தானில் இரண்டு வெவ்வெறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
-
வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிப்பு: அதிபர் ட்ரம்புக்கு மேயர் மம்தானி நேரடி எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் படத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கையா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்
04 Jan 2026கோபி, ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்று முத்துசாமி கூறினார்.
-
ஏ.வி.எம். நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமா பற்றி பேசவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
04 Jan 2026சென்னை, ஏ.வி.எம். சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.வி.எம்.
-
தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி தொடக்கம்
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறுகிறது தமிழ்நாடு: மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதற்காகன மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
-
கலைஞரின் மரியாதையை பெற்றவர்: ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் நடிகர் ரஜினி பேச்சு
04 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞரின் மரியாதையை பெற்றவர் என்று ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
சர்வாதிகாரிகளை கையாள முடிந்தால்.. புதினை சிறைப்பிடிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூசகம்..?
04 Jan 2026கீவ், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சிறைப்பிடிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
-
5 மணி நேரம் காத்திருந்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
04 Jan 2026திருச்செந்தூர், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
-
வெனிசுலா மீதான தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு கமலா ஹாரிஸ் கடும் எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீதான ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
விபி-ஜி ராம் ஜி சிறந்த திட்டம்: மத்திய அமைச்சர் பெருமிதம்
04 Jan 2026புதுடெல்லி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட, விபி-ஜி ராம் ஜி சட்டம் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.
-
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
04 Jan 2026திருச்சி, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட்: இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள்
04 Jan 2026மெல்போர்ன், ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
டி-20 உலக கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு: 7 ஆல்-ரவுண்டர்கள் சேர்ப்பு
04 Jan 2026டாக்கா, டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவில் ஒருவர் உயிரிழப்பு
04 Jan 2026கீவ், ரஷ்யாவின் எல்லையோர மாகாணமான பெல்ஹொராட்டில் சாலையில் சென்ற கார் மீது உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு
04 Jan 2026தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


