எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவில்பட்டியில் உள்ள விசுவகர்ம பள்ளி முன்பு அமைக்கபட்ட திருவள்ளுவர் திடலில் ஏழை பேராசிரியர், தமிழ் உணர்வு உள்ள மண்ணின் மைந்தர் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களின் தொடர்முயற்ச்சியால் உருவாக்கபட்ட திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா அவரின் தமிழ் இலக்கிய வாரிசுகள், மாணக்கர்களால் விடாமுயற்ச்சியின் பொருட்டு கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா
பலவேறு தமிழ்இன விரோதிகளால் ஏற்படுத்தபட்ட தடைகளையும் மீறி நடந்த விழாவுக்கு தலைவர் கருத்தபாண்டி தலைமை வகித்தார். துணைதலைவர் திருமலை முத்துசாமி, செயலாளர் நம்.சீனிவாசன், இணைசெயலாளர் சான்கணேசு, பொருளாளர் முத்துராசு, தணிக்கையாணர் அந்தோணிராசு, வழக்கறிஞர் பரமசிவம், நெறிபடுத்துனர்கள் இலக்குமணபெருமாள், பரமசிவம், விநாயகாரமேசு, ஆகியோர்களின் கடும் முயற்ச்சியால் நடந்த நிகழ்வில் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தலைமை ஏற்று பேசுகையில் தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் பேரறிஞர் உலக தமிழ் மாநாட்டினை நடத்தினர், அவரை வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர், சங்கம் வளர்த்த மதுரையில் 1981ல் 5வது உலக தமிழ் மாநாட்டை நடத்தி , தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் நிறுவி பெருமை சேர்த்தார். அதே வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தஞ்சையில் உலக தமிழ்மாநாட்டினை நடத்தி, நான்காம் தமிழாம் அறிவியல் தமிழை அறிமுகப்படுத்தினர். அந்த வழியில் தான் நாங்களும் தமிழ் உணர்வோடு வந்த காரணத்தினால், பெயரளவில் தமிழ் உச்சரிப்பது மட்டுமல்லமால், அம்மாவின் அரசினை நடத்தி கொண்டு இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஹார்டுபல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்பதற்காக 10கோடி ரூபாய் வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளது அம்மாவின் அரசு என்பதனை பெருமையுடன் கோடிட்டு காண்பிக்க விரும்புகிறேன். அதன் பிறகு தான் தமிழ் அறிஞர்கள், தமி@ழ் ஆர்வலர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். ஒரு மனிதன் தனது வாழ்க்கை நெறியை செம்மைபடுத்தி கொள்ள தெய்வபுலவர் திருவள்ளுவரின் திருக்குறளை பின்பற்றினால் போதும் என்று எடுத்துரைத்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் தமிழ் பரவ வேண்டும், திருக்குறளின் பெருமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க ரூ. 5கோடி ரூபயாய் ஒதுக்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டது மட்டுமின்றி அதனை செயல்படுத்தி பெருமையை சேர்த்தார். அது மட்டுமல்லாது பாரதிய ஜனதாகட்சியை சேர்ந்த எம்.பி. தருண் விஜய், திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமாரியில் இருந்து கொண்டு சென்ற போது, சென்னையி@ல் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்களையும் பங்கேற்க வைத்தது மட்டுமின்றி, அந்த சிலையை பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கும் பணியும் ஜெயலலிதா செய்ய உத்தரவுபிறப்பித்து செயல்படுத்தி காட்டினார். தமிழுக்கு பெருமை சேர்ந்த திருவள்ளுவரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதே பணியை கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற சிறப்பாக செய்து வருகிறது. இதன் 50வது பொன்விழா ஆண்டில் உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை கோவில்பட்டி வரழைத்து, மிகப்பெரிய அளிவில் நடத்திட என்னால் முடிந்த உதவிகளை,நான் எந்த நிலையில் இருந்தாலும் உறுதியாக செய்வேன் மேலும் தமிழுக்கு பெருமைசேர்த்த எனது ஏழை பேராசிரிய பெருந்தகை ஐயா அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களுக்கும், தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் அதிமுக அரசு என்றும் பெருமை சேர்க்கும் என்றார். இதனை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச்செல்வன் வள்ளுவம் என்ற வாழ்வியல் அறம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதையெடுத்து வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல்காதர் தலைமையில் சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லெட்சுமணப்பெருமாள், தொழில் அதிபர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு, இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்புவித்தலில் அசத்திய மாணவிகள்: திருவள்ளுவர் மன்ற 46ஆம் ஆண்டு நிறைவு விழாவின் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரையடுத்த ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வரும் 8ஆம் வகுப்பு மாணவி ரா.பிருந்தாலட்சுமி மற்றும் அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி ர.நாகஜோதி ஆகிய இருவரும் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்தனர்.மேலும், விழாவில் பங்கேற்ற ஆர்வலர்கள் திருக்குறள் அதிகாரத்தின் தலைப்பை குறிப்பிட்டு கேட்டாலும், திருக்குறளின் வரிசை எண்ணை குறிப்பிட்டு கேட்டாலும் மாணவிகள் அந்த திருக்குறளை அடிபிறழாமல் ஒப்புவித்தது விழாவில் பங்கேற்ற அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, திருக்குறளை ஒப்புவித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.