முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா ஐந்தாம் திருவிழாவான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குடவருவாயில் தீபாராதனை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவில் ஐந்தாம் நாளான நேற்றுகாலை சிவன் கோயிலிருந்து சுவாமி குமரவிடங்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தார். சிவன் கோயிலில் வைத்து சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. நேற்று இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது குடவருவாயில் தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில் கீழரதவீதி சந்திப்பிலிருந்து சுவாமி ஜெயந்தி நாதர் எதிர்திசையில் எதிர்சேவை தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சுவாமி, அம்மன் தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இத்திருவிழாவின் ஆறாம் நாளான இன்றுகாலை சிவன் கோயிலிலிருந்து சுவாமி கோ ரதத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பந்தல் மண்டபம் சேர்ந்தார். காலை 10 மணிக்கு காயாமொழி ஆதித்த நாடார்கள் சாட்டையடி மண்டகப்படியிலிருந்து சுவாமி, அம்மன் எழுந்தருளி திருவாவடுதுறை ஆதீன மண்டகப்படி சேருகிறார். அங்கு அபிஷேகம் அலங்காரமாக மீண்டும் சிவன் கோயிலை சேருகிறார். இரவு 8 மணிக்கு சிவன் கோயிலிரந்து சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதி உலா நடககிறது. மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழாம் திருவிழாவை முன்னிட்டு நாளை(24ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்டசேவை நடக்கிறது. மாலையில் 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து