முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.02.2018 அன்று மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது.

உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 10 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்; குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 183 என மொத்தம் 193 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார்,சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம், பாங்கல் கிராமத்தைச் சேர்ந்த செல்வி.வேம்புராணி, தபெ.முருகையன் என்பவர் பாம்பு கடித்து இறந்தமைக்காக அவரது தந்தையாரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருநது வரப்பெற்ற ரூ.50,000-க்கான காசோலையினையும், காசநோயால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை வடக்கு மடவளாகத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000-க்கான ஆணையினையும் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார்வழங்கினார்.

இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து