முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.

தேரோட்டம்

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடும், சிறந்த குருபரிகார ஸ்தலமும், கடற்கரையில் அமைந்துள்ள அழகிய திருக்கோவிலுமான திருச்செந்தூரில் மாசி திருவிழா கடந்த பிப் 20-ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினசரி காலை, மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழா 7ம் திருநாளில் சுவாமி சண்முகபெருமான் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8ம் திருநாளில் அதிகாலை வெள்ளை சாத்தி கோலத்திலும், மாலை பச்சை சாத்தி கோலத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து திருக்கோவில் வந்து சேர்ந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.  அதிகாலை 5.45 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 6.20 மணிக்கு தேர் நிலை வந்து சேர்ந்தது, தொடர்ந்து காலை 6.45 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக பக்தர்கள் அரோகரா கோஷம் ஒலிக்க வலம் வந்து காலை 8.25 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அதன்பின் காலை 8.35 மணிக்கு தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காலை 9.50 மணிக்கு நிலைக்கு வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, திருக்கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், ஆர்டிஓ தங்கவேலு, திருக்கோவில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, உதவி செயற்பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், மணியம் ரமேஷ், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மனோரஞ்சிதம், தொழிலதிபர்கள் கதிரேச ஆதித்தன், ரமணி, அர்ச்சனா கிட்டப்பா, இந்து முன்னணி மாநில தலைவர் அரசுராஜா, மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொது செயலாளர் சக்திவேலன், பாஜ மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், அதிமுக மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, தமிழ்நாடு மாநில பனைவெல்ல கூட்டுறவு இணைய தலைவர் தாமோதரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் டவுன் பஞ்., தலைவர் சுரேஷ்பாபு, பூந்தோட்டம் மனோகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி, தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை ஆலோசகர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் கண்ணன்ஆதித்தன், இணைஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து