முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 13ம் தேதி நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வருகிற 13ம் தேதிவேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

 வேலை வாய்ப்பு முகாம்

இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 வயது முதல் 35 வயது வரையுள்ள 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையும்படி மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, தெரிவித்துள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து