எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலகு சார்பில், மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), ஆகியோர் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்து, 134 உழைக்கும் பெண்களுக்கு ரூ.33.50 இலட்சம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனத்தினை வழங்கினார்கள்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது
‘பெண்கள் நினைத்தால், தங்கள் தலையெழுத்தை மட்டுமல்ல மற்றவர்களின் தலையெழுத்தையும் மாற்ற முடியும். அவர்களுக்கு தேவை, வாய்ப்புகள்! அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதே எனது இலட்சியம்” என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அமுதமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கான வாய்ப்புகளை அளித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் 16.02.2017 அன்று பதவியேற்றவுடன் முதலில் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் முதல் திட்டமான ‘அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்திற்கு” கையெழுத்திட்டு, புரட்சித் தலைவி அம்மா பிறந்த நன்நாளான 24.02.2018 அன்று பாரத பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரால் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது.
உழைக்கும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, 50 சதவீத மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் முற்றிலும் மகளிருக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஊரகம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளை சார்ந்த உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க (யுரவழ பநயச / புநயசடநளள 125உஉ க்கு மிகாமல்) மானியத்தொகை, ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மூலம் மானியமாக வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்திற்கு 2017-18ம் நிதியாண்டில் “அம்மா இருசக்கர வாகனம்” வழங்கும் திட்டமானது, 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1,550 வாகனங்களும், ஈரோடு மாநகராட்சியில் 746 வாகனங்களும், 4 நகராட்சிகளில் 213 வாகனங்களும், 42 பேரூராட்சிகளில் 703 வாகனங்களும் என மொத்தம் 3,212 வாகனங்கள் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 134 பயனாளிகளுக்கு ரூ.33.50 இலட்சம் மானிய விலையில் ‘அம்மா இருசக்கர வாகனம்” வழங்கப்படுகிறது. புரட்சித்தலைவி அம்மா ஏழைகள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய அடித்தள மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ளார்கள். ஏழை எளியோர், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடிதள மக்களுக்கு கைகொடுத்து, அவர்களை உயர்த்த வேண்டும் என்பதில் அளவற்ற அக்கறை கொண்டு, தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் புரட்சித்தலைவி அம்மா .
ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக பத்தாவது படித்த பெண்களுக்கு ரூ.25,000 திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டையம் படித்த பெண்களுக்கு ரூ.50,000 திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியுள்ளார்கள். மாணவ மாணவியருக்கு 14 வகையான கல்வி உபபொருட்கள், கட்டணமில்லா பேருந்து வசதி என புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பல்வேறு கல்வித் திட்டங்களால் கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா கறவைப்பசு வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி வழங்கும் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் என எண்ணற்ற நலத்திட்டங்களை ஏழைகளுக்காக வாரி வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா .
இத்திட்டத்தினால் உழைக்கும் மகளிர் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல் தங்களது அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் செய்யவும் இயலும்.
எனவே உழைக்கும் பெண்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இச்சிறப்பு திட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தினைத்தினையும், பொருளாதாரத்தினையும் உயர்த்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது.
புரட்சித்தலைவி அம்மா பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்த நாளில் உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தை துவக்கி வைத்தார்கள். ஈரோடு மாவட்டம் மகளிர் திட்டம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட ஏழை எளிய மகளிரின் நீடித்த நிலைத்த வாழ்வாதாரத்தை மேம்பாடுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கி, குடும்ப வருமானத்தை பெருக்கி வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
புரட்சித்தலைவி அம்மா அரசு பெண் ஊழியாகளுக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு, ஏழை, எளிய பெண்கள் கர்ப்பகாலத்தில் யாரையும் சாராமல் இருக்க பேறுகாலத்தில் வழங்கி வந்த ரூ.12,000 நிதியுதவியினை ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கியதோடு, குழந்தை பிறந்தவுடன் 16 வகை பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தினை வழங்கியுள்ளார்கள். பச்சிளங்குழந்தையுடன் பெண்கள் வெளியூர் செல்ல நேரிட்டால் சிரமப்படக்கூடாது என்பதற்காக பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, பெண்களுக்கென காவல் நிலையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12,076 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,70,000 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் மொத்த சேமிப்பு ரூ.215 கோடி. 2017-18-ம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனாக இதுவரை ரூ.160 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு துவங்கப்பட்டு ரூ.2.25 கோடி ஊக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் துவங்கப்பட்டு இதுவரை ரூ.18 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 3,298 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு தனி நபர் கடனாக ரூ.3.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 1105 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ1.68 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 671 புதிய மகளிர் சுய அமைக்கப்பட்டு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி நடத்திட ரூ.80 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 403 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது மகளிராகிய நீங்கள் அரசு வழங்குகின்ற பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுவதோடு, தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதோடு, எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், மகளிர் திட்ட இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் ஆர்.சீனிவாசன், உதவி திட்ட அலுவலர்கள் இரா.சாந்தா, சுப்பிரமணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
உடல் நலக்குறைவால் நாகை எம்.பி. காலமானார்
13 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.