முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.கே.நகரில் 5 கடைகளில் கொள்ளை

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      சென்னை

கே.கே.நகரில் 5 கடைகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு கே.கே.நகர் வேம்புலியம்மன் கோவில் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் பல்வேறு கடைகள் உள்ளன.

பல்வேறு கடைகள்

இதில் ஸ்ரீதேவி என்பவர் நடத்தி வரும் போட்டோ ஸ்டூடியோ கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கேமரா, ரூ.40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அங்குள்ள மருந்து கடைக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் 3 கடைகளின் பூட்டுகளை உடைத்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். சமீபத்தில் விருகம்பாக்கத்தில் உள்ள..பி.’ வங்கியில் நகை-பணம் கொள்ளை சம்பவம் நடந்தது. தற்போது அதன் அருகே உள்ள மேற்கு கே.கே.நகரில் கொள்ளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து