எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆகியோர், கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி மற்றும் கயத்தார் ஆகிய இடங்களில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்கள்.விழா பேரூரையில் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்; தெரிவித்ததாவது:
புதிய திட்டப்பணிகள் துவக்கம்
மறைந்தாலும், மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மா அவர்களின் அரசு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்மா கிராமபுறத்தில் வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும்; என்ற உயர்ந்த நோக்கத்தோடு விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கினார்கள். அம்மா விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து, தமிழக மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து, துரிதமாக செயல்படுத்திவருகிறார்கள். குறிப்பாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள பெரியசாமிபுரம் கால்நடை கிளை நிலையத்தில் கால்நடைகளுக்கு 6 விதமான தரம் உயர்த்தப்பட்ட ஊசிகள் போடப்படும். மேலும், கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் 3 தினங்களுக்கு இலவசமாக மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கிராமத்தில் உள்ள கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவார்கள் மேலும், தமிழகத்தில் 800 கால்நடை மருத்துவர்கள் முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். கால்நடை உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புகழ் பெற்ற காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட பார் ஆடுகள், கோழிகள் இனப்பெருக்கத்துக்கு 7 இடங்களில் மருத்துவ ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10 கோடி விதம் ரூ.70 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு மாவட்டத்திற்கும் கால்நடை துறைக்கு அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை கால முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஏற்கனவே கோமாரி நோய் தடுப்பதற்கான தடுப்பூசி முகாம் மருத்துவ நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்கள். விழா சிறப்புரையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது:
அம்மா கடைகோடியில் உள்ள பொது மக்களும்,அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள். குறிப்பாக பொது மக்களின் அடிப்படை வசதியான சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கிடு செய்து அதன் மூலம் பொது மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்படுத்தினார்கள். அம்மா அவர்களின் நல்லாசியுடன், தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு பெற்றது. இந்த ஒராண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஓவ்வொரு துறையின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக, கோவில்பட்டி பகுதியில் உள்ள மக்களின் 40 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், சுமார் ரூ.86 கோடி மதிப்பிட்டில், குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால், பொது மக்களுக்கு வரபிரசாதமாக துவக்கி வைக்க உள்ளார்கள். கோவில்பட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும், எட்டையபுரம் இருவழிச்சாலை, இரயில்வே சாலை, புதூர் சாலை, ஆர்த்தி திருமணமண்டபம் சாலை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.31 இலட்சம் செலவில் கால்நடை மருந்தகம் அமைக்கப்பட உள்ளது. இத்தகைய திட்டங்களை நீங்கள் பயன்படுத்தி, அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கூறினார்கள். இவ்விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் வெங்கடேஷ், கோவில்பட்டி கோட்டாட்சிதலைவர் அனிதா, மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வட்டாட்சியர் ஜான்தேவசகாயம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சித. செல்லப்பாண்டியன், நகராட்சி ஆணையாளர் அட்சயா, கோவில்பட்டி டிஎஸ்பி. ஜெபராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கோவில்பட்டி அதிமுக பெருநகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், பாண்டவ்hமங்கலம் தொட்கக கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர். இராமச்சந்திரன், துறையூர் கணேசப்பாண்டியன், வண்டாம் கருப்பசாமி, அம்பிகாவேல்மணி, செண்பகமூர்த்தி, ஜெமினி என்ற அருணாசலசாமி, எம்ஜீஆர் இளைஞரணி செயலாளர் சௌந்தராஜன், அல்லிதுரை, கம்மாபட்டி கிளை செயலாளர் செல்லச்சாமி, அண்ணா தொழிற்சங்கம் டிரைவர் விஜயன், செல்லையா, ஆபிரகாம்அய்யாத்துரை, மாணவரணி செயலாளர் போடுசாமி இளைஞர் பாசறை பழனிகுமார், வானரமூட்டி கூட்டுறவு இயக்குனர் அலங்கபாரபாண்டியன், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலாளர் இரமேஷ், இருளப்பன், மாணவரணி போடுசாமி, தலைமை கழக பேச்சாளர் மத. மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.


