எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆகியோர், கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி மற்றும் கயத்தார் ஆகிய இடங்களில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்கள்.விழா பேரூரையில் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்; தெரிவித்ததாவது:
புதிய திட்டப்பணிகள் துவக்கம்
மறைந்தாலும், மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மா அவர்களின் அரசு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்மா கிராமபுறத்தில் வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும்; என்ற உயர்ந்த நோக்கத்தோடு விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கினார்கள். அம்மா விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து, தமிழக மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து, துரிதமாக செயல்படுத்திவருகிறார்கள். குறிப்பாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள பெரியசாமிபுரம் கால்நடை கிளை நிலையத்தில் கால்நடைகளுக்கு 6 விதமான தரம் உயர்த்தப்பட்ட ஊசிகள் போடப்படும். மேலும், கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் 3 தினங்களுக்கு இலவசமாக மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கிராமத்தில் உள்ள கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவார்கள் மேலும், தமிழகத்தில் 800 கால்நடை மருத்துவர்கள் முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். கால்நடை உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புகழ் பெற்ற காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட பார் ஆடுகள், கோழிகள் இனப்பெருக்கத்துக்கு 7 இடங்களில் மருத்துவ ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10 கோடி விதம் ரூ.70 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு மாவட்டத்திற்கும் கால்நடை துறைக்கு அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை கால முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஏற்கனவே கோமாரி நோய் தடுப்பதற்கான தடுப்பூசி முகாம் மருத்துவ நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்கள். விழா சிறப்புரையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது:
அம்மா கடைகோடியில் உள்ள பொது மக்களும்,அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள். குறிப்பாக பொது மக்களின் அடிப்படை வசதியான சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கிடு செய்து அதன் மூலம் பொது மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்படுத்தினார்கள். அம்மா அவர்களின் நல்லாசியுடன், தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு பெற்றது. இந்த ஒராண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஓவ்வொரு துறையின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக, கோவில்பட்டி பகுதியில் உள்ள மக்களின் 40 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், சுமார் ரூ.86 கோடி மதிப்பிட்டில், குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால், பொது மக்களுக்கு வரபிரசாதமாக துவக்கி வைக்க உள்ளார்கள். கோவில்பட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும், எட்டையபுரம் இருவழிச்சாலை, இரயில்வே சாலை, புதூர் சாலை, ஆர்த்தி திருமணமண்டபம் சாலை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.31 இலட்சம் செலவில் கால்நடை மருந்தகம் அமைக்கப்பட உள்ளது. இத்தகைய திட்டங்களை நீங்கள் பயன்படுத்தி, அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கூறினார்கள். இவ்விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் வெங்கடேஷ், கோவில்பட்டி கோட்டாட்சிதலைவர் அனிதா, மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வட்டாட்சியர் ஜான்தேவசகாயம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சித. செல்லப்பாண்டியன், நகராட்சி ஆணையாளர் அட்சயா, கோவில்பட்டி டிஎஸ்பி. ஜெபராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கோவில்பட்டி அதிமுக பெருநகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், பாண்டவ்hமங்கலம் தொட்கக கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர். இராமச்சந்திரன், துறையூர் கணேசப்பாண்டியன், வண்டாம் கருப்பசாமி, அம்பிகாவேல்மணி, செண்பகமூர்த்தி, ஜெமினி என்ற அருணாசலசாமி, எம்ஜீஆர் இளைஞரணி செயலாளர் சௌந்தராஜன், அல்லிதுரை, கம்மாபட்டி கிளை செயலாளர் செல்லச்சாமி, அண்ணா தொழிற்சங்கம் டிரைவர் விஜயன், செல்லையா, ஆபிரகாம்அய்யாத்துரை, மாணவரணி செயலாளர் போடுசாமி இளைஞர் பாசறை பழனிகுமார், வானரமூட்டி கூட்டுறவு இயக்குனர் அலங்கபாரபாண்டியன், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலாளர் இரமேஷ், இருளப்பன், மாணவரணி போடுசாமி, தலைமை கழக பேச்சாளர் மத. மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.