எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: போலி முத்திரைத் தாள்களை ஒழிக்க, மின்னணு ஸ்டாம்ப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்களில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி அவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய பயன்கள் விரைவாக சென்றடையவும் அரசு வழிவகுத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ஆன்லைனில் செலுத்தும்...
தமிழகத்தில் வழக்கு தொடர்வதற்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் இ-ஸ்டாம்பிங் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து இ-ஸ்டாபிங் முறையில் கட்டணத்தை செலுத்தும் கவுன்டர்களை திறந்துவைத்து முதல் 5 பேருக்கான ரசீதை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
மின்னணு ஆளுமை
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீதித்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை புகுத்துவதன் அவசியத்தையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டும், இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக, நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசால் நேற்று முதல் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பெருமகிழ்ச்சி...
போலி முத்திரைத்தாள்களை ஒழிக்கவும், முத்திரைத்தாள்கள் பயன்பாட்டில் பாதுகாப்பினை அதிகரிக்கவும் தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பதிவுத்துறையில் சென்னை மண்டலத்தில் பயன்பாட்டில் உள்ள மின்னணு நீதிசாரா முத்திரைத்தாள் முறையை, அம்மாவின் அரசு, தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் நீதித்துறையில் பயன்படுத்தப்படும் நீதிசார்ந்த முத்திரைத்தாள்கள் பயன்பாட்டிலும் பாதுகாப்பான இம்முறையை கொண்டுவருவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இணையம் மூலம்...
இத்திட்டத்தை செயல்படுத்த, திருவாளர்கள் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்திலும், டெல்லி, சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநில உயர்நீதிமன்றங்களிலும் இம்முறையை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. இந்த நீதிசார்ந்த மின்னணு முத்திரையை பொதுமக்கள் தாங்களாகவே இணையம் மூலம் உருவாக்கி பயன்படுத்தலாம். கணினி மற்றும் இணைய இணைப்பு இல்லாதவர்கள் மேற்கண்ட நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மையங்களில் அல்லது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொகையினை செலுத்தி, நீதிசார்ந்த மின்னணு முத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம்.
விரைவில் அனைத்து....
இம்முறை, முதற்கட்டமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும், அடுத்த கட்டமாக அனைத்து முதன்மை மாவட்ட நீதிமன்றங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் இம்முறையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள்களில் தனிப்பட்ட இரசீது எண் அச்சிடப்பட்டிருக்கும். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பிரிவில் இந்த முத்திரைத்தாளை ஒப்படைத்தால், அதன் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது மட்டுமின்றி, அதனை மீளவும் தவறான முறையில் பயன்படுத்தா வண்ணம் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு நீதிமன்றங்களில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி அவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய பயன்கள் விரைவாக சென்றடையவும் தமிழ்நாடு அரசு ஆவன செய்துள்ளது. இதுமட்டுமன்றி, எண்ணில்லா நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு நீதித்துறைக்கு வழங்கியுள்ளது.
பணியிடங்கள்...
வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும்போதே இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 7 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 4 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தியும் அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக கடந்த ஓராண்டில் பல்வேறு பதவிகளுக்கு 1,188 பணியிடங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.
ரூ.1 கோடியே 45 லட்சம்...
நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வண்ணம், மாநிலத்தின் பல்வேறு இடங்களில், கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 149 நீதிமன்றங்களை உருவாக்க அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுதல், நீதிமன்றக் கட்டடங்களை பழுது பார்த்தல், இதர உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக 92 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரிய மின்சக்திக்கான உபகரணங்களை நிறுவுவதற்கு 1 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பாரம்பரிய கட்டிடத்தின் 125ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசால் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நிலுவை வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர 149 நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீதித்துறைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
8-வது மாநிலம்
இ-ஸ்டாம்பிங் திட்டத்தை அறிமுகப்படுத்தும் 8-வது மாநிலம், தமிழகம் ஆகும். இதன் மூலம் வழக்குக்கான கட்டணத்தை மின்னணு முறையில் பொதுமக்கள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை வழக்கு தொடர்வதற்கான கட்டணம், ஸ்டாம்ப், பத்திரம் மூலமாகவே பெறப்பட்டு வந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பாலியல் வழக்கு விவகாரம்: ரேவண்ணா மீது 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
07 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாக புகார் கொடுத்துள்ளது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 60.97 சதவிகிதம் வாக்குப்பதிவு
07 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சூர்யகுமார் யாதவ் அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை
07 May 2024மும்பை : சூர்யகுமார் யாதவ் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
08 May 2024 -
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 இ.வி.எம். எரிந்து முற்றிலும் நாசம்
08 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
-
போலீசார் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை: தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்?'' என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கே
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
08 May 2024வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
தஙகம் விலை சற்று குறைந்தது
08 May 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனையானது.