எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை, - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழா அமைச்சர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகளின் விளம்பர பதாகைகள் ஏந்தி ஓட்டுநர் பயிற்சி மாணவர்கள் சென்றார்கள். மேலும் அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,
சாலை பாதுகாப்பு வார விழா ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதன்; நோக்கம் சாலை விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதேயாகும். அதற்காக வட்டார போக்குவரத்துறை மற்றும் அரசு போக்குவரத்துறையின் மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலையில் விபத்துக்களை தவிர்த்திடுவது என்பது வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்ல நடந்து செல்பவர்களும் கவனமாகச் சென்றால்தான் சாலையில் விபத்துக்களை தவிர்க்க முடியும். அதேபோல் அரசு பல்வேறு நிலைகளில் விதிமுறைப்படி வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. அதை ஒருசிலர் கண்டு கொள்ளாததால் விபத்து போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படுகிறது. சாலை விதிமுறைகளின்படி வாகன ஓட்டிகள் தங்களுரிய பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். அதேபோல் சாலையை கடக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளின்படி எங்கு சாலை கடக்க அனுமதிக்கப்பட்ட இடமோ அந்த இடங்களை மட்டுமே பயன்படுத்தினால் விபத்துக்களை தவிர்த்திடலாம். அதேபோல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். அதேபோல் சாலை கடப்பவராக இருந்தாலும் சரி, இருசக்கர வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி, கனரக வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி சாலையில் வாகனங்களை இயக்கும் பொழுது செல்போன் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்திட வேண்டும். மேலும் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு முறையாக விதிமுறைகளை கடைப்பிடிக்கும் போது விபத்துக்கள் குறைந்து விடும்.
இதை பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டு இதற்காக 23.04.2018 முதல் 29.04.2018 வரை ஒருவாரம் காலம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. துவக்கமாக இன்று (23.04.2018) சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பேரணி துவக்கப்பட்டு இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. 24.04.2018 அன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் இருச்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மூலம்
முக்கிய வீதிகளின் வழியாக பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிதல், சீட்பெல்ட் அணிவதன் முக்கியவத்துவம் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன. 25.04.2018 அன்று பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கணினி மென்பொருள் பணியாளர்கள் ஆகியோருக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகின்றன. 26.04.2018 அன்று உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின்படி போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 27.04.2018 அன்று நான்கு வழிச்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன் வாகன ஓட்டுநரின் சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டுதல் மற்றும் வாகனங்களை முந்தும்போது விதிமுறைகளை கடைபிடித்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். 28.04.2018 அன்று சாலையின் முக்கிய சந்திப்புகள், வாரச்சந்தைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியப் பகுதிகளில் அதிகளவில் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊர்காவல் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நிறைவாக 29.04.2018 அன்று சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வு ஒருவார காலத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை ஏன் கடைபிடிக்க வேண்டும் அதன் அவசியம் என்ன என்பதை நன்கு உணரமுடியும். அந்த வகையில் அரசு பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வு நன்றாக தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் தன்னைத்தானே பாதுகாத்திடுவது மட்டுமன்றி தன் குடும்பத்தையும் பாதுகாத்திடும் வகையில் செயல்பட்டு தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றிட ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர், வட்டார ஆய்வாளர்கள் முருகன், அருண்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
பியூஷ் கோயல் நியூசிலாந்து பயணம்
05 Nov 2025வெலிங்டன்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியூசிலாந்து சென்றார்.
-
முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய ஆண்கள் 2-வது திருமணம் செய்ய முடியாது கேரள உயர் நீதிமன்றம் கருத்து
05 Nov 2025திருவனந்தபுரம்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.;
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
அமெரிக்கா: சரக்கு விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்
05 Nov 2025மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளா
-
சத்தீஷ்கார் ரயில் விபத்து: பலி 11 ஆக அதிகரிப்பு
05 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மறைவு
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ரிச்சர்டு புரூஸ் டிக் சேனி காலமானதை தொடர்ந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
ஐ.சி.சி.யின் செயலால் சர்ச்சை
05 Nov 2025மகளிர் ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்காத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
-
பூங்கா இடத்தில் வேறு கட்டிடங்களை கட்டக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை
05 Nov 2025மதுரை: பூங்காவுக்காக ஒதுக்கிய இடங்களில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு மீண்டும் லபுஷேனுக்கு வாய்ப்பு
05 Nov 2025பெர்த்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மார்ன்ஸ் லபுசேனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
பிலிப்பின்ஸில் கோர தாண்டவம்: கேல்மெகி புயலுக்கு 66 பேர் பலி
05 Nov 2025மணிலா: மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய டைபூன் டினோ என்றழைக்கப்படும் கேல்மெகி புயல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி வெற்றி
05 Nov 2025வாஷிங்டன்: நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.
-
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்
05 Nov 2025காத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹாலின் (பிரசண்டா) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) உள்பட 9 கட்சிகளை ஒன்றிணைத்து நேபாள கம்யூனிஸ்ட் க
-
சாதி, மத அரசியலால் நாட்டுக்கு பெரும் தீங்கு: ராஜ்நாத்சிங் பேச்சு
05 Nov 2025பாட்னா: சாதி, மதம் தொடர்பான அரசியல் நாட்டுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தை வைத்து அரசியல


