எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை, - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழா அமைச்சர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகளின் விளம்பர பதாகைகள் ஏந்தி ஓட்டுநர் பயிற்சி மாணவர்கள் சென்றார்கள். மேலும் அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,
சாலை பாதுகாப்பு வார விழா ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதன்; நோக்கம் சாலை விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதேயாகும். அதற்காக வட்டார போக்குவரத்துறை மற்றும் அரசு போக்குவரத்துறையின் மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலையில் விபத்துக்களை தவிர்த்திடுவது என்பது வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்ல நடந்து செல்பவர்களும் கவனமாகச் சென்றால்தான் சாலையில் விபத்துக்களை தவிர்க்க முடியும். அதேபோல் அரசு பல்வேறு நிலைகளில் விதிமுறைப்படி வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. அதை ஒருசிலர் கண்டு கொள்ளாததால் விபத்து போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படுகிறது. சாலை விதிமுறைகளின்படி வாகன ஓட்டிகள் தங்களுரிய பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். அதேபோல் சாலையை கடக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளின்படி எங்கு சாலை கடக்க அனுமதிக்கப்பட்ட இடமோ அந்த இடங்களை மட்டுமே பயன்படுத்தினால் விபத்துக்களை தவிர்த்திடலாம். அதேபோல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். அதேபோல் சாலை கடப்பவராக இருந்தாலும் சரி, இருசக்கர வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி, கனரக வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி சாலையில் வாகனங்களை இயக்கும் பொழுது செல்போன் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்திட வேண்டும். மேலும் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு முறையாக விதிமுறைகளை கடைப்பிடிக்கும் போது விபத்துக்கள் குறைந்து விடும்.
இதை பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டு இதற்காக 23.04.2018 முதல் 29.04.2018 வரை ஒருவாரம் காலம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. துவக்கமாக இன்று (23.04.2018) சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பேரணி துவக்கப்பட்டு இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. 24.04.2018 அன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் இருச்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மூலம்
முக்கிய வீதிகளின் வழியாக பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிதல், சீட்பெல்ட் அணிவதன் முக்கியவத்துவம் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன. 25.04.2018 அன்று பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கணினி மென்பொருள் பணியாளர்கள் ஆகியோருக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகின்றன. 26.04.2018 அன்று உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின்படி போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 27.04.2018 அன்று நான்கு வழிச்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன் வாகன ஓட்டுநரின் சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டுதல் மற்றும் வாகனங்களை முந்தும்போது விதிமுறைகளை கடைபிடித்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். 28.04.2018 அன்று சாலையின் முக்கிய சந்திப்புகள், வாரச்சந்தைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியப் பகுதிகளில் அதிகளவில் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊர்காவல் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நிறைவாக 29.04.2018 அன்று சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வு ஒருவார காலத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை ஏன் கடைபிடிக்க வேண்டும் அதன் அவசியம் என்ன என்பதை நன்கு உணரமுடியும். அந்த வகையில் அரசு பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வு நன்றாக தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் தன்னைத்தானே பாதுகாத்திடுவது மட்டுமன்றி தன் குடும்பத்தையும் பாதுகாத்திடும் வகையில் செயல்பட்டு தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றிட ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர், வட்டார ஆய்வாளர்கள் முருகன், அருண்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.