முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேதினத்தை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றியத்தில் நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வேஷ்டி-சேலைகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்:

புதன்கிழமை, 2 மே 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மேதினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவியர்க வேஷ்டி-சேலைகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கினார்.
மேதினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழாக்கள் அ.தி.மு.க சார்பில் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே நேற்று முன்தினம் மதுரை புறநகர் மாவட்டம் செக்கானூரணியில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் மாபெரும் மேதினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதையடுத்து மேதினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.கொக்குளம்,கிண்ணிமங்கலம்,தேங்கல்பட்டி,புங்கங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவியாக வேஷ்டி-சேலைகள் வழங்கிடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மேற்கண்ட கிராமங்களில் வசித்திடும் நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வளித்திடும் வகையில் அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகளாக வேஷ்டி-சேலைகளை வழங்கினார்.மேதினத்தை முன்னிட்டு நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை நினைவு கூர்ந்து கருணையுள்ளத்துடன் வேஷ்டி-சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,மாநகர் அம்மா பேரவை வெற்றிவேல்,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சிவன்காளை,சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து