முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 15-ம் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிக்கிம் பயணம்

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக, வரும் 15-ம் தேதி சிக்கிம் மாநிலத்துக்குச் செல்கிறார்.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் உள்ள ஐ.சி.எப்.ஏ.ஐ. பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, பாக்யாங்கில் உள்ள தேசிய மல்லிகை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் அந்த மையத்தின் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இந்நிலையில், வெங்கையா  நாயுடுவின் பயணத் திட்டம் குறித்து விரிவாக விவாதிப்பதற்காக, காங்டாக்கில் சிக்கிம் தலைமைச் செயலர் ஏ.கே.ஸ்ரீவாஸ்தவா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், ஐ.சி.எப்.ஏ.ஐ. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பாக்யாங் விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பயணம் திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து