முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம்முடனான சந்திப்புக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளவிருந்த கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்காவும், தென்கொரியாவும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இது குறித்து தென்கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட ராணுவ கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு தென் கொரியாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன. இந்த நிலையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை நடத்தியது.

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா - தென் கொரிய ராணுவப் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. இதன் பின்னர் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில்  வடகொரியா பங்கேற்றது. அதை தொடர்ந்து டிரம்ப் - கிம் இடையே இச்சந்திப்பு கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியைக் கைவிட டிரம்ப் சம்மதிருந்தார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து