எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- வருவது எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா அரசின் திட்டங்களை மக்களிடம் முன்னிறுத்தி அமோக வெற்றி பெற்றிடுவோம் என்று திருமங்கலம் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதிபடத் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஆலம்பட்டி, கட்ராம்பட்டி ,அச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நலிவடைந்த குடும்பங்களுக்கு கழக அம்மா பேரவை சார்பில் தலா 10ஆயிரம் ரூபாயை குடும்பநல நிதியாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.பின்னர் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
அம்மா அரசின் சரித்திர சாதனைகளை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.கடந்த 17 மாத கால ஆட்சியில் 32 ஆயிரம் தடைகற்களை தகர்த்து எறிந்து மக்களுக்கு சீர்மிகு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.குறிப்பாக 23ஆயிரம் கோடியில் 50ஆயிரம் திட்டப்பணிகள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் திறந்து வைத்திருக்கிறார்கள்.48ஆயிரம் கோடிக்கு 60ஆயிரம் புதிய திட்டபணிகள் இன்றைக்கு நடைபெற்று வருகிறது.இந்த பணிகளும் விரைவில் முடிவடைந்திடும்.இந்தியாவிலே சிறந்த நிர்வாகத்திற்காக மக்களின் நலன் காத்திடும் அரசாக கேரள மாநிலத்திற்கு அடுத்து இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.அம்மாவின் லட்சியக் கனவான அன்னைத் தமிழகம் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்திடும் லட்சியத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்.இருப்பினும் குறிப்பிட்ட சில துறைகளில் நாம் இந்தியாவிலே முதலிடத்தில் இருக்கிறோம்.ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.முதலில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திக் காட்டி அம்மா சரித்திர சாதனை படைத்துள்ளார்.அனைத்து வசதிகளும் ஒருங்கே கிடைத்திடும் இடமான தமிழகம் அதிகளவு முதலீடுகளை கவர்ந்து வருகிறது.இருப்பினும் எதிர்கட்சியினர் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைத்து 32ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.அவற்றையெல்லாம் தகர்த்து எறிந்து கடைக் கோடியிலிருப்பவர்களுக்கும் அம்மாவின் சீர்மிகு திட்டங்களை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.அதை மக்களிடம் எடுத்துச் சொல்லிட ஊர் ஊராக எடுத்துச் சென்றிட கழக அம்மா பேரவையின் சார்பில் சைக்கிள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் மூலம் எதிர்கட்சியினர் மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரங்;கள் முறியடித்திடும் வகையில் இந்த சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த முயற்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கழகத்தின் வெற்றிக்கு அச்சாரமாக திகழ்ந்திடும்.
இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதற்காக அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை அவர்கள் நடத்தி இருப்பவர்களுக்கே பத்து பொறுப்புகளை வழங்குகிறார்கள்.திரும்பத் திரும்ப அவர்களுக்கே பல்வேறு பதவிகள் வழங்கப்படுகிறது.ஒருவரே அமைப்பு செயலாளர்,அவரே மாவட்டச் செயலாளர்,அவரே கிளைச் செயலாளர் என ஒருவரே அனைத்து பதவிகளையும் வகிப்பது புதிய முறையாக இருக்கிறது.அம்மா இருக்கும் போது ஒருவருக்கு அரசு பொறுப்பு ஒன்று இருக்கும் கழக பொறுப்பு ஒன்று இருக்கும்.அங்கு உழைப்பிற்கோ தியாகத்திற்கோ இடம் கிடையாது.யார் கேட்டாலும் பதவிகளை அளவீடுகள் இல்லாமல் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஒட்டு மொத்தமாக நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு அம்மா அவர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள்.அதற்கு ஆய்வுகள் மேற்கொண்டு சாத்தியக்கூறுகளை கண்டறிந்து நிதி ஒதுக்கீடு செய்வதுடன் இது போன்ற திட்டங்களுக்கு உரிய முன்னுரிமை கொடுக்கப்படும். நமது பகுதியில் உள்ள 58-ம் கால்வாய் திட்டம் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது.மிக விரைவில் அதில் தண்ணீர் வருகிற காட்சியை நாம் காண இருக்கிறோம்.இந்த திட்டத்தை மிக விரைவில் முதல்வர் நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்கள். பொதுவாக துயர சம்பவங்கள் நடைபெறும் சமயத்தில் பல்வேறு தலைவர்கள் வரும் போது நம்மிடம் உள்ள காவல்துறையை பயன்படுத்திஉச்சகட்ட பாதுகாப்பு வழங்குவது நமது மரபாகும்.காவல் துறையின் நடைமுறைப்படி அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து ராகுல்காந்தி எங்கும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.இங்கிருப்பவர்கள் சிலர் அரசியல் காரணங்களுக்காக சொல்கிறார்களே தவிர ராகுல்காந்தி சொன்னதாக தகவல் இல்லை.எந்தவித சட்;டம் ஒழுங்கு பிரச்சனையும் இன்றி சமாளித்து அம்மாவின் அரசு இதில் வெற்றி பெற்றுள்ளது.
வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மாவுடைய அரசின் சாதனைகளை தியாகங்களை முன்னிறுத்தி மக்களை நேரில்சந்தித்து வெற்றி பெறுவோம்.தமிழ்நாடு என்றால் எப்போதுமே இரட்டைஇலை தான் மக்களுக்கு பிடித்த சின்னம்.இந்தியாவிலே 3வது பேரியக்கமாக அ.தி.மு.க வர உதவியாக இருந்தது இரட்டை சின்னம்.மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ள சின்னமான இரட்டைஇலை என்றுமே வெற்றி பெற்றிடும்.தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்திடும்.அதற்கு கட்டுப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்களும் செயல்படுவோம்.புதிய புதிய திட்டங்கள்வந்து கொண்டே இருக்கிறது.மக்களின் நலனுக்காக அம்மாவின் அரசு நாள்தோறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.எய்ம்ஸ் மருத்துவமனை,பஸ்போர்ட்,ஸ்மார்ட் சிட்டி போன்ற அனைத்து திட்டங்களும் புதியவைதான்.பஸ்போர்ட் குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்கள்.அரசியல் காழ்ப்பணர்ச்சி காரணமாக தொடுக்கப்படுகிற அந்த வழக்குகள் என்பதை நாங்கள் பலமுறை மக்களிடத்தில் சொல்லியிருக்கிறோம்.அது உண்மை என்பது இன்றைக்கு வெட்;டவெளிச்சமாகியுள்ளது.ஒரே நாள் இரவு வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப்படுகிறது.அவர்களுக்கு என்றால் ஒருநீதி மற்றவர்களுக்கு என்றால் ஒருநீதி என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்துள்ளது.மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு என்றால் அனைத்தையும் வாபஸ் வாங்குகிறார்கள்.மற்றவர்களுக்கு என்றால் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்.அம்மா முதல்அமைச்சராக இருந்த போது உயிர் பிரிந்தது.அது மரபுப்படி அங்கே இடஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டது.நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்ற காரணத்தினால் இடம் ஒதுக்க இயலவில்லை என்றகாரணத்தை முதல்வர் சொல்லும் போது உடனடியாக வழக்கு வாபஸ் வாங்கப்படுகிறது.இதிலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்;ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம்,ராமசாமி,ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,அவைதலைவர் அன்னகொடி,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், பாவடியான்,பாஸ்கரன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
25 Apr 2024புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.