முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
Image Unavailable

   ராஜபாளையம்,-  ராஜபாளையத்தில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
 இறைதூதர் இப்ராஹிம் தன்னுடைய சொந்த மகனை கடவுளுக்காக தியாகம் செய்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கொண்டாடப் படும் பக்ரீத் பண்டிகை ராஜபாளையத்தில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. சம்மந்தபுரம், சத்திரப்பட்டி, தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
 புத்தாடை அணிந்தவாறு, ராஜபாளையம் சம்மந்த புரத்தில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக தொழுகையில் ஈடுபட்டனர்.  தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து