எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,- விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்; போது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்றும், புதியதாக அனுமதி ஏதும் வழங்ககூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட பாதையிலேயே ஊர்வலம் செல்ல வேண்டும் என்றும், விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடங்களில் சிலையினை நிறுவிய நபர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வரவேண்டுமென்றும், எளிதில் சிதையக்கூடிய களிமண் மற்றும் காகிதக்கூழ் போன்றவற்றில் மட்டுமே விநாயகர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் எக்காரணத்தை முன்னிட்டும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்ட்( Pடயளவநச ழக Pயசளை) மற்றும் காரியம் பயன்படுத்தப்பட்டிருக்கும் இராசாயன வர்ணம் ஆகியவற்றினால் ஆன சிலைகள் அமைக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும் என்றும், பிற மதத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் பட்சத்தில் மதவேற்றுமையை தூண்டக்கூடிய கோஷங்களை எழுப்பக் கூடாது. மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அனைத்து மதத்தலைவர்களுடனும் இணக்கமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விழாவினை நடத்திட வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலைகள் ஊர்வலத்தின்போது தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் எனவும், உயரமான சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பட்சத்தில், அவற்றினால் விபத்து ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மின்சார வாரியத்தினரிடம் அறிவுறுத்தினார்.
விநாயகர் சிலைகளை மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வைகை வடகரை கீழ்த்தோப்பு பகுதி, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம் (திருமலைராயர் படித்துறை), திருப்பரங்குன்றம் செவந்திகுளம் கண்மாய், அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாய், மேலூர் வட்டத்திற்குட்பட்ட மண்கட்டி தெப்பக்குளம், கொட்டாம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் தெப்பம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை, தாமோதரன்பட்டி தென்கரை, அய்யனார் கோவில் ஊரணி, பெரியாறு கால்வாய், உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட நீர் அதிகம் உள்ள கிணறுகள், திருமங்கலம் வட்டத்திற்குட்பட்ட குண்டாறு, மறவன்குளம் கண்மாய், குராயூர் கண்மாய், ஆவல்சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டலநதி மற்றும் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊரணி, எழுமலை பெரிய கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய் போன்ற இடங்களில் மட்டுமே விசர்ஜனம் செய்ய வேண்டும்.
மேலும், விநாயகர் சதுர்த்தி திருவிழாவினை நல்ல முறையில் நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன், கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், உதவி பயிற்சி ஆட்சியர் கே.என்.பிரவீன் குமார், காவல்துறை உதவி ஆணையர் அருண்சக்தி கோபால், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
12 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்துள்ளது.
-
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
12 Nov 2025சென்னை : தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
12 Nov 2025புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.
-
இங்கு திறமையானவர்கள் இல்லை: ஹெச் -1பி நடைமுறையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப்
12 Nov 2025வாஷிங்டன் : வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவில் திறமையானவர் இல்லை என்றும், அதனால் ஹெச் -1பி விசா
-
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா
12 Nov 2025பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது
12 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
12 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த பெண்கள்: பா.ஜ.
12 Nov 2025பாட்னா : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2025.
12 Nov 2025 -
அசாமில் நிலநடுக்கம்
12 Nov 2025திஸ்பூர் : அசாமில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை : மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க தூதரகம் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு இ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
ராயபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
12 Nov 2025சென்னை : சென்னை துறைமுகம் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர்
-
கனடா அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
12 Nov 2025ஒண்டாரியா : கனடா அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
டிச. 17-ல் சிறை நிரப்பு போராட்டம்: அன்புமணி
12 Nov 2025சென்னை : டிசம்பர் 17-ல் சிறை நிரப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதல்வர் வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோடா தரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்
12 Nov 2025புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்தி
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம்: தி.மு.க. அரசு மீது விஜய் மறைமுகமாக விமர்சனம்
12 Nov 2025சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
-
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது
12 Nov 2025பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய மாநில அரசுகளுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை, தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
புதுக்கோட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : சட்டசபை தேர்ல் வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி குறித்து அறிவுறுத்தல்
12 Nov 2025சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் ஆகிய 3 தொகுதி தி.மு.க.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்
12 Nov 2025துபாய் : ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியலில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
எகிப்து: விபத்தில் 2 பேர் பலி
12 Nov 2025கெய்ரோ, எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 3 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
12 Nov 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் காயம் அடைந்தவர்கள் புதன்கிழமை காலை சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.


