முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,500 கன அடியிலிருந்து 21,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 17,800 கன அடியிலிருந்து 19,800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 120.19 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 93.77 டி.எம்.சி.யாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து