எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி- பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மாவட்ட கழகத்தின் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் கழக பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார்.
மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான் பேசும்போது வாக்காளர் பட்டியலில்; பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் பேசும்போது பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக நமது கழகம் இருந்து கொண்டிருக்கிறது. அரசியல் புரட்சி செய்தவர் எம்.ஜி.ஆர். பெண்ணின் பெருமையை பறைசாற்றும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சுமார் 16 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்தார். தற்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இணைந்து அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக, சிறந்த மாநிலமாக உருவாக்கி இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் தொகுதியாக தேனி தொகுதி இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க, நம் கழகத்தினர் ஒவ்வொருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார்.
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசும்போது, நமது கழகத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தோற்றுவித்தபோது அவருக்கு உறுதுணையாக கழகத்தை வளர்த்ததும், அசைக்க முடியாக எஃகு கோட்டையாக உருவாக்கியது அதிமுக தொண்டர்களின் உழைப்பும், உயிர் தியாகமுமே ஆகும். நமது கழகத்திற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட சோதனைகளை எல்லாம் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். 1972 ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நமது இயக்கத்தை ஆரம்பித்தபோது எவ்வளவோ சோதனைகள். அவற்றையெல்லாம் வெற்றி கண்டு 1977ல் புரட்சித்தலைவர் தலைமையில் நமது கழக ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நடைபெற்றது. புரட்சித்தலைவரின் மறைவுக்கு பின் கழக பொதுசெயலாளரான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1991ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் கழக ஆட்சியை கொண்டு வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை திட்டங்களாக்கி, அத்திட்டங்களை குக்கிராமங்கள் வரை அனைத்து மக்களுக்கும் பயனடைய கொண்டு சென்றார்.
திமுக எப்படிப்பட்ட கட்சி, அதிமுக எப்படிபட்ட கட்சி என்று மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அதிமுக தான் மக்களின் தேவைகளை நிறைவேற்றி, நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைக்க செய்கின்ற கட்சி என்று புரிந்து வைத்திருந்ததால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற நமது கழகத்திற்கு 37 இடங்களில் வெற்றி என்ற மிகப்பெரிய பரிசை தமிழக மக்கள் வழங்கினர். மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முல்லை பெரியார் அணை பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி 142 அடி வரை நீரை தேக்கி கொள்ள ஆணை பெற்றுத் தந்து 5 மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை பெற்றுத்தந்ததற்கு தேனி பாராளுமன்ற தொகுதி மக்கள் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஆர்.பார்;த்திபன் எம்.பி அவர்களை வெற்றி பெற செய்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தற்போது
இல்லை. நமது இயக்கம் தொடர்ந்து தொண்டர்களின் இயக்கமாக, உண்மையாக உழைக்கின்ற தொண்டர்களும் பதவிகளை பெற வேண்டும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இணைந்து கழகத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். மேலும் அம்மாவின் அரசு, அம்மாவின் கனவை நனவாக்க உழைத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது நாம் தேர்தல் களத்திற்கு தயாராகும் வகையில் முதல் படியில் ஏறியிருக்கின்றோம். தற்போது வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சீர் செய்ய வேண்டும்.
வார்டில் வெற்றி பெறாதவர்களுக்கு கூட மாநில, மாவட்ட பதவிகளை ஒரு கட்சி வாரி வழங்கி கொண்டிருக்கிறது. இது போன்று யாரு, எப்படிப்பட்டவர்கள் வந்தாலும், என்ன வித்தை காண்பித்தாலும், தேர்தல் களத்தில் நாம் ஒற்றுமையாக பணியாற்றினால் அனைத்து தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்று சிறப்புரையாற்றினார். பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் நன்றி கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தேனிமுருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, தேனி வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், கம்பம் சோலைராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், போடி பழனிராஜ், கம்பம் ஜெகதீஸ், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலை-மயிலை கொத்தாளமுத்து. கம்பம் இளையநம்பி, உத்தமபாளையம் பி.ஆர்.பி.அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், போடி சற்குணம் மற்றும் வடுகபட்டி சுந்தரபாண்டியன், பழனிசெட்டிபட்டி தீபன்சக்கரவர்த்தி உள்ளிட்ட அனைத்து பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி